Friday 30 December 2022

5 Tips for Tax Saving in 2023

Five strategies to save tax.

Happy New Year 2023

New Year 2023 has arrived. We are in January. I do not know if this is the time for viral fever or not, but many people will get tax fever. Everyone in the tax bracket will Look for ways to invest in tax saving schemes, to reduce tax. Usually, they end up in insurance. There are better ways to get more returns than that.

  1. ELSS: Equity Linked Savings Scheme. In this plan, compulsory locking years are only three years, not like ten years in insurance. More than 40 fund companies here are offering these types of schemes. We have selected five funds for your investment consideration. We have tabulated three-year and 10-year returns in % for proper understanding and comparing other similar tax savings instruments having different lock in periods. In the next 5 years, the probability of ELSS giving more return than current 5-year tax saving bank deposit bearing interest rate of 7.5%

Fund Name

Rating

3 Yr Ret (%)

5 Yr Ret (%)

10 Yr Ret (%)

Canara Robeco Equity Tax Saver

5

19.58

14.39

14.8

DSP Tax Saver

4

17.55

11.55

16.11

IDFC Tax Advantage (ELSS)

4

22.6

11.27

16.47

Kotak Tax Saver

4

17.8

12.17

14.32

Mirae Asset Tax Saver

5

18.03

12.96

  1. SIP: SIP is the most popular word now. We know that investing in SP is better in many ways than investing in a lump sum. Recession is round the corner and rising interest rates are visible. In this volatile season, SIP in ELSS seems very appropriate. So put off the hesitation, start an ELSS-SIP of around rupees 10,000 - 12,500 per month in any one of the above-listed schemes and harvest the potential benefits of tax saving and better returns.
  2. Health insurance: In this covid period even if you have employer group insurance, over and above it is good to consider availing health insurance for individuals. This is tax deductible under section 80D. In this uncertain period of employments, having personal health policy will cater to medical need, during switching the jobs or when leaving company
  3. NPS: Those who now think that they should be comfortable in retirement, please consider investing in NPS. An additional tax deduction of ₹50,000 can be made by investing in pension (NPS) (80CCD 1B) schemes.
  4. Earlier is better: In the month of March, it is obvious that the investment in tax-saving schemes will increase. But many IT companies and other companies will get the tax saving details from the employees in December and January. They calculate the applicable TDS based on these inputs. So, there is no point in sleeping till the 11th hour. Wake up. Start investing in ELSS through SIP mode Now, reduce your tax burden and TDS outgo.

Contact us to save tax

Radha Consultancy : Contact us

I would really appreciate if you could please take a few seconds to post a Google review in the link below

you can give your feedback by clicking this link which will help me for improving my services better

You can read the previous articles about tax saving article published last year here

Tax saving quarter

Thursday 8 December 2022

தலைகீழ் அடமானம். Reverse Mortgage

08-12-2022 

To read this article in English click here

நம்மில் பெரும்பாலோனோர் வருங்காலத்தைப் பற்றி இளமையில் சம்பாதிக்கும்போது நினைத்து சேமிப்பதில்லை. நம் தாய் தந்தைகளும் அவ்வாறு இருந்ததுமில்லை. அந்த காலங்களில் வயதானவர்கள், குழந்தைகள் கூட இருந்து விடுவார்கள். ஓய்வு காலத்தில் அவர்களுக்கு வருமானம் தேவையில்லை. காலம் மாறிவிட்டது. உறவுகள் சொந்தம் பார்பதில்லை. பெரும்பாலும் குழந்தைகள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவரவர்கள், அவரவர்கள் பாட்டை பார்த்து கொண்டிருக்கிறார்கள். வருமானம் இல்லாத ஓய்வு கால வாழ்க்கை மிகவும் கடினம்தான். 

இந்த மாதிரி நேரங்களில் வீடு இருந்தால் போதும். மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்ந்து காட்டலாம். என்ன வீட்டை விற்று  விட்டு, நாங்கள் எங்கே போவது தெருவுக்கா?  இந்த கடி சொல்  என் காதில் விழுகின்றது.   அப்படில்லாம் சொல்வேனா  நான். ஓய்வு காலத்தில் சொந்த வீட்டில், தெரிந்த சுற்றுப்புறத்திலேயே ஆயுள் முழுதும் இருந்து கொண்டு மாதாமாதம் செலவுக்கும் பணம் பெறலாம். இந்த வகையான வங்கிக் கடனுக்கு தலை கீழ்  அடமானம் என்று நாமம்(Reverse Mortgage). அதை பற்றி மேலும் விரிவாக பார்க்கலாம். 

தலைகீழ் அடமான வங்கிக் கடனின் சிறப்பம்சங்கள். 

  1. தம்பதிகள் இருவரும் அவர்களது வீட்டிலேயே இருவரது வாழ்க்கை காலம், வரை வசிக்கலாம்.
  2. தம்பதிகள் வங்கிகளுக்கு எந்த வகையான பணமும் கட்ட வேண்டாம். அதற்கு பதிலாக வங்கிகள் தொடர்ந்து ஓய்வூதிய செலவுக்கு பணம் தந்து கொண்டே இருக்கும்.
  3. தம்பதிகள் ஆயுள் காலத்திற்கு பிறகு வாரிசுகளும் வங்கிகளுக்கு இது சம்பந்தமாக எந்த வகையான பணமும் கட்டத் தேவையில்லை.
  4. வரிவிதிப்பு முறையில் வங்கிகளிடம் இருந்து பெறும் பணம் வருமானமாக கருதப்படாது.
  5. வங்கியிடமிருந்து பணம் பெறும் காலத்திலும் வீடு உரிமையாளர் பெயரிலேயே இருக்கும். 

யாரு யாரெல்லாம் தலைகீழ் அடமான கடனை வங்கிகளிடமிருந்து பெற முடியும்? 

  1. வீடு, தம்பதிகள் இருவர்  பெயரிலோ அல்லது ஒருவர் பெயரிலோ கட்டாயம் இருக்க வேண்டும்.
  2. பொதுவாக தம்பதிகளில் ஒருவர் வயது 60 க்கு மேலும் அடுத்தவர் வயது 55 க்கு மேலும் இருக்க வேண்டும்.
  3. வீட்டின் தாய்ப்பத்திரம் சுத்தமாக இருக்க வேண்டும். வேறு கடனிலோ அல்லது எதாவது ஒருவகையான நிலுவையிலோ இருக்கக் கூடாது. (Clear title without any encumbrance)
  4. தம்பதிகள் அந்த வீட்டிலேயே நீண்ட காலத்திற்கு வசிக்கலாம். இருவரில் ஒருவர் இல்லாத போதும், மற்றொருவர் அந்த வீட்டிலேயே தொடர்ந்து வசிக்கலாம்.
  5. வாடகை வரும் வீட்டிற்கோ அல்லது வியாபாரமயமாக செயல்படும் வீட்டிற்கோ(commercial property) இந்த கடன் பெற முடியாது.
  6. கடன் பெறுவதற்கு, கடன்பெறும் தம்பதிகள் வருமானம் எவ்வளவு உள்ளது அல்லது அவர்களது கடன் பெற தகுதி (credit score) உள்ளதா?என்ற விவரங்களை வங்கிகள் பார்க்காது . அந்த வீட்டின் மதிப்பு எவ்வாறு உள்ளது என்பதை மட்டுமே பார்க்கும் .
  7. பெரும்பாலான நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள், ஸ்டேட் பேங்க் உட்பட இந்த வகையான கடன்களை, முதிய தம்பதிகளுக்கு கொடுத்து வருகின்றது. 

தலைகீழ் அடமானகடனின் நடைமுறை. 

  1. வங்கிகளின் மதிப்பீட்டாளர்களின்படி, வீடு கட்டி வருடம் எத்தனை  ஆகியுள்ளது. இன்னும் எத்தனை வருடங்கள் நன்றாக இருக்கும் என்று ஆய்வுசெய்து, அதன் மதிப்பீட்டின் அடிப்படையில் கடன் வழங்கப்படும்.
  2. வீட்டின் மதிப்பீட்டுத் தொகையில் இருந்து சுமார்.60% - 80% வரை கடன் கிடைக்கும்.
  3. வீட்டின் மதிப்பை வங்கி ஆய்வாளர்கள் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மதிப்பீடு செய்து அதற்கு ஏற்றவாறு கடன் தொகையை மாற்றிக் கொள்வார்கள்.
  4. கடன்  தொகை என்பது, நமக்கு, கிடைக்கும் தொகை மற்றும் அதற்கான வட்டி, இந்த கடனுக்காக செய்த மற்ற செலவினங்கள். எல்லாம் சேர்ந்து மொத்த தொகை ஆகும்
  5. கடனுக்கான வட்டி விகிதங்கள் 8% - 12% இருக்கலாம். இது வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது.
  6. பொதுவாக வீடு கட்டுவதற்கு வாங்கும் கட னுக் கான வட்டி விகித்தை விட இந்த வகையான கடனுக்கு வட்டி விகிதம் சற்று கூடுதலாகவே இருக்கின்றது.
  7. வங்கியிடம் இருந்து  நமது தேவைக்கு ஏற்ப மாதாமாதம்மோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளிகளில்  நாம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இது தவிர மருத்துவச் செலவுகளுக்காக, அதிகமாக, ஒரே தடைவையாக பணத்தை பெற்றுக் கொள்ளும் முறையும் சில வங்கிகளில் உள்ளது.
  8. தம்பதிகள் இருவரின் ஆயுட்காலத்திற்கு பிறகு வங்கிகள் அந்த வீட்டை அன்றைய தேதியில் விற்று விட்டு, வரும் தொகையில் அவர்களுக்கு சேர வேண்டிய தொகையை எடுத்துக்கொண்டு, மீதமுள்ள தொகையை அவர்கள்  வாரிசுக்கு (legal heirs)  கொடுத்து விடுவார்கள்.
  9. ஏதோ ஒரு காரணத்தினால் வீட்டை விற்று வரும் தொகை வங்கிகளின் கடன் தொகையை விட குறைவாக இருந்தாலும், வாரிசுகள் வங்கிகளுக்கு பணம்  கொடுக்க தேவையில்லை. வங்கிகள் அதற்கான தொகையை காப்பீட்டு நிறுவனங்களிடம்  இருந்து பெற்றுக்கொள்ளும். இது மிக முக்கியமான அம்சமாகும்.
  10. வாரிசுகள் அந்த வீட்டை அவர்களே வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அன்றைய தேதியில் வங்கிகளுக்கு தர வேண்டிய தொகை அனைத்தையும் கட்டிவிட்டு வீட்டை அவர்களே வைத்துக்கொள்ளலாம்.
  11. தம்பதிகள் வேறு வீட்டிற்கு செல்ல நினைத்தாலும் அல்லது கடன் போதும் என்று நினைத்தாலும் அல்லது வீட்டை விற்று விட நினைத்தாலும், வங்கிகளுக்கு தர வேண்டிய தொகை அனைத்தையும் கட்டிவிட்டு அவர்கள் நினைத்தவாறு செய்யலாம்.

உதாரணமாக, மாதா மாதம்.ரூபாய் 15,000, 15 வருட காலம் பெறுவதற்கு, 8%-9% வட்டி வீதத்தில், கடன் பெறும் தொகை வட்டி சேர்த்து சுமார் 50 லட்சமாக இருக்கும். இதற்கு வீட்டின் இன்றய மதிப்பு  சுமார் 70 லட்சமாக இருப்பது அவசியம்.  

போதிய வருமானம் இல்லாத முதிய தம்பதிகள் ஓய்வு காலத்தில் தங்களுக்கு மிகவும் பழக்கமான நெருக்கமான சொந்த வீட்டிலேயே ஆயுட் காலம் வரை இருப்பதற்கு இது மிகச் சரியான வழியாகவே தோன்றுகின்றது.