Monday 26 March 2018

மியூச்சுவல் ஃபண்ட் வருமான கணக்கீடு - செபியின் அடுத்த அதிரடி!

My recent article has been published in "Nanayam Vikatan". Click here to read the article directly from vikatan website. The same article is given below.


மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை இன்னும்  எளிமையாக்கவும், முதலீட்டாளர்களின் லாபத்தை அதிகரிக்கவும்  செபி பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. அண்மையில், ஒரே மாதிரியான முதலீட்டு போர்ட் ஃபோலியோவைக் கொண்டுள்ள திட்டங்களில் ஒரே ஒரு திட்டத்தை மட்டுமே ஒவ்வொரு நிறுவனமும் வைத்திருக்க வேண்டும் என செபி உத்தரவிட்டது. இந்த உத்தரவு இப்போதுதான்   நடைமுறைக்கு வரத் தொடங்கியிருக்கிறது. 

இந்த நிலையில், மியூச்சுவல் ஃபண்ட் வருமான ஒப்பிட்டு முறையில் மாற்றத்தைக் கொண்டுவருமாறு, மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனங்களுக்கு செபி தற்போது உத்தரவிட்டுள்ளது. இது என்ன உத்தரவு?    


பொதுவாக, ஒரு மியூச்சுவல் ஃபண்ட், நல்ல திட்டமா என்று பார்ப்பதற்கு, அதன் லாப விகிதத்தை, அதன் பெஞ்ச் மார்க் குறியீட்டுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.  அதாவது, ஒரு ஃபண்டின் லாபத்தையும், பெஞ்ச்மார்க் குறியீட்டின் லாபத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.

தற்போது பெஞ்ச்மார்க் குறியீட்டின் இரண்டு இடைப்பட்ட தேதிகளின் வித்தியாசத்தை மட்டுமே வருமானத்தைக் கணக்கிட எடுத்துக் கொள்கிறோம். இதை மட்டும்  பார்க்காமல், குறியீட்டின் வித்தியாசத்தையும் அந்தக் குறியீட்டில் இடம்பெற்றுள்ள பங்குகள் மூலம் கிடைத்த டிவிடெண்ட் வருமானத்தையும் சேர்த்து, மொத்த வருமானத்தைக் கணக்கிட வேண்டும் என்பது செபியின் லேட்டஸ்  உத்தரவு. 

பொதுவாக, பங்காக இருந்தாலும் சரி, அல்லது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடாக இருந்தாலும் சரி, அதன் லாப விகிதத்தைக் கணக்கிட, அதாவது ஒரு குறிப்பிட்ட தேதியிலிருந்து இன்னொரு தேதி வரை கிடைத்த லாப விகிதத்தைப் பெற, அந்தந்தத் தேதிகளில் உள்ள விலை வித்தியாசத்தை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்படும்.  இந்த நடைமுறைதான் பொதுவாக,  எல்லோராலும் எல்லா நிலைகளிலும் பயன்படுகிறது. பிறகு  ஏன்  செபி, புதிய உத்தரவை இப்போது கொண்டு வருகிறது? 

காரணம், சற்று நுட்பமானது. இதை ஒரு உதாரணத்தின் மூலம் தெளிவாகப் புரிந்துகொள் வோம். ஏப்ரல் முதல் தேதியிலிருந்து மார்ச் 31-ம் தேதி வரை நிஃப்டி 9% லாபம் தந்தது என்று வைத்துக்கொள்வோம். ஒருவர் முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் அதே காலகட்டத்தில் 10% லாபம் தந்தது என வைத்துக் கொண்டால், அந்த மியூச்சுவல் ஃபண்ட் மேலாளர், பெஞ்ச்மார்க் இண்டெக்ஸைவிட 1% அதிக லாபம் தந்துள்ளேன் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வார். இதுதான் ஆல்ஃபா என்று அழைக்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்டின் சிறப்பே, சந்தையைவிட எவ்வளவு அதிக லாபம், அதாவது ஆல்ஃபா தந்திருக்கிறார் என்பதே. ஆனால், இந்த லாபம் உள்ளபடியே, சந்தை தந்த லாபத்தைவிட அதிகமா என்பதுதான் முக்கியமான கேள்வி.

கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், சந்தையின் லாபம், விலையை மட்டுமே வைத்து  பார்க்காமல், மொத்த வருமான விவரத்தின்படி அதே தேதி களில் விலை வித்தியாசம், டிவிடெண்ட் வருமானம், அந்தக் குறியீட்டில் உள்ள பங்குகளுக்கு வந்த வருமானம் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதன்படி லாபத்தைக் கணக்கிட  வேண்டும்.

உதாரணமாக, இந்தக் குறிப்பிட்ட கால கட்டத்தில் டிவிடெண்ட் வருமானம் 1.5% என்றால், நிஃப்டி குறியீட்டின் மொத்த வருமான விகிதம் 10.5 சதவிகிதமாக மாறும். ஆனால், ஃபண்டின் வருமானம் 10 சதவிகிதம்தான். அப்போது அந்த ஃபண்ட், நிஃப்டி குறியீட்டைவிட குறைவான வருமானம் கொடுத்துள்ளதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.   


இனிமேல் செபியின் புது உத்தரவின்படி, நிஃப்டி, சென்செக்ஸ் போன்ற குறியீடுகளில் மொத்த வருமானம், பெஞ்ச்மார்க் வருமானமாக எடுத்துக்கொள்ளப்படும். இனி, ஃபண்ட் மேலாளர்கள் குறியீடுகளைவிட அதிக வருமானம் தர மிகவும் பாடுபட வேண்டியிருக்கும். அப்படி வருமானம் தரவில்லை எனில், குறியீடுகளைவிட குறைவான லாபம் தந்ததாக ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்.  

செபியின் இந்தப் புதிய உத்தரவை நடைமுறைக்குக்கொண்டு வந்து, மியூச்சுவல் ஃபன்ட் நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன. முதலீட்டாளர்களும், இனி தங்கள் பங்குக்கு இந்தப் புதிய உத்தரவைப் புரிந்துகொண்டு, பங்குகளை அலசி ஆராய்ந்து முதலீடு செய்வது நல்லது!

Monday 19 March 2018

சந்தையின் வீழ்ச்சியால் சந்தியில் நிற்கும் பண்டு முதலீட்டாளர்கள்

சந்தையின் இறக்கம் புதிது அல்ல. பட்ஜெட்டிற்கு பிறகு,  09-03-2018 வரை சந்தையின் இறக்கம்  -8.2%.  மீயூச்சுவல்  பண்டுகளின் இறக்கமும் அதை சார்ந்தே உள்ளது. நமக்குத் தெரிந்ததுதான், கடந்த ஒன்றரை முதல் இரண்டு வருடங்களில்  பண்டு முதலீடுகள் உயர்ந்துகொண்டே போனது. கடந்த ஆறு மாதங்களில் பண்டு முதலீடு செய்த பலரின் திட்ட  தொகை  அளவு, முதலீடு செய்த தொகையை விட குறைவாக (நெகட்டிவ்வாக) உள்ளது. காரணம், சந்தை கடந்த ஒரு மாதத்தில் குறைந்துகொண்டே வந்திருக்கிறது. 26-02-2018 இருந்து 07-03-2018 வரை 7  தினங்களில்  -4.1% சதவீதம் வரை குறைந்து இருக்கின்றது.

கடந்த ஓரிரு வருடங்களில் பண்டிற்கு வந்தவர்களுக்கு இந்த சரிவு பெரிய அதிர்ச்சி. சந்தியில் நிற்பது போன்ற உணர்வு. டிப்ஸ் கொடுத்வர்கள் மேல் கோபம். இனி எந்த வழியில் பயணிப்பது என்று குழப்பம்.

சந்தையில் சரிவு
சந்தையில் குறைவுக்கு பல காரணங்கள் சொல்லப்படும், பட்ஜெட் பாதிப்புகள், பெரியண்ணன் அமெரிக்காவின் சட்டதிட்ட மாறுதல்கள், உலகச் சந்தையின் போக்கு, பிஎன்பி முறைகேடுகள் பதினோராயிரம் + கோடிகள் ( 11000 0000000) . எத்தனை சைபர்கள் என்று என்ன முடியாதபடி முறைகேடுகள், இது போன்று இதுவரையில் வெளிவராத புதிய கோடிகளை தொடும் ஊழல்கள்,  என்று ஒவ்வொரு ஏற்ற இறக்கத்திற்கும் காரணங்கள் சொல்லப்படும்.

எதார்த்தம்
நாம் மறக்காமல் மனதில் கொள்ள வேண்டியது, இது முடிவல்ல இதுவும் கடந்து போகும் என்ற எதார்த்தமே.  அதை விட்டு விட்டு,  நான் இனிமேல் பங்கே வாங்க மாட்டேன், பங்கு பண்டில் முதலீடு செய்ய மாட்டேன் என கூறுவதால் லாபம் ஏதுமில்லை.  தான் எப்படி இந்தச் சூழலை..  பாதகமான சூழலை, சாதகமாக மாற்றிக் கொள்ளலாம் என்று யோசித்து, அதற்கேற்றவாறு புதிய முதலீடுகளை  செய்வது சாலச் சிறந்ததாகும்.

எஸ்.ஐ.பி 
முதலில் மிக முக்கியமாக புதிய முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, நமது எஸ்.ஐ.பி யின் மொத்த மதிப்பு குறைந்து வருகிறது என்பதால் எஸ்.ஐ.பி தயைவு செய்து நிறுத்தி விட வேண்டாம். எஸ்.ஐ.பி யின் தாத்பரியமே, இதுபோன்று சந்தை இறங்கும் போது அதே மாதாந்திர தொகைக்கு கூடுதலான யூனிட்டுகளை  வாங்கும். எனவே எஸ்.ஐ.பி தொடங்கி கட்டி வருபவர்கள் சந்தையின் பாதிப்பைப் பற்றி மிகவும் வருத்தம் கொள்ளாமல் எஸ்.ஐ.பி யை தொடர்ந்து நடத்துவது மிக முக்கியமான புரிதலாக இருக்கவேண்டும்.

ஏற்றமும் இறக்கமுமே சந்தை 
இரண்டாவது, குறைந்து வரும் உங்களது போர்ட்போலியோ (Portfolio) தொகையை  தினந்தோறும் பார்த்து, ஏறியுள்ளது, இறங்கியுள்ளது என்று கவலை கொள்ள வேண்டாம். சந்தையில்  ஏற்படும் இறக்கமும், பின்னர் ஏற்றமும் சகஜமே.  

சந்தையில் சரிவால், பங்கில் நேரடியாக முதலீடு செய்பவர்களுக்கும், மற்றும் மியூச்சுவல் பண்ட்  மூலம் முதலீடு செய்பவர்களையும் எப்படி பாதிக்கிறது என்று பார்ப்போம். நாங்கள் அடிக்கடி சொல்வதுண்டு, நேரடி பங்கு முதலீட்டில் அதிகம் ரிஸ்க் என்றும் மியூச்சுவல் பண்ட் பங்கு முதலீட்டில் ரிஸ்க் குறைவு என்றும். இது இப்போது உறுதி செய்யபடுகின்றது.   உதாரணமாக நீங்கள் சுமார் 1 லட்சம் ரூபாயை முறைகேடு தகவலுக்கு முன், 29-01-2018 ல்  பி.என்.பி  ல் முதலீடு செய்திருந்தால் அது இன்றைய (09-03-2018) தேதியில் -45.1% சதவிகிதம் குறைந்து 54,900  இருக்கும். அதேசமயம் ஒரு டைவர்ஸிபைடு மியூச்சுவல் பண்டில் ( Diversified equity mutual fund)  முதலீடு செய்திருந்தால் இவ்வளவு குறைந்து இருக்காது. லார்ஜ் கேப் திட்டங்கள்  சராசரியாக -3.27% குறைந்துள்ளது, காரணம் எந்தவொரு மியூட்சுவல் பன்ட்  திட்டமும் தனிப்பட்ட பங்குகளில் 5 சதவீதத்திற்கு மேல் முதலீடு  செய்வது இல்லை. எனவே நேரடி பங்கு முதலீட்டில் ரிஸ்க் அதிகம். இது போன்ற பி.என்.பி முறைகேடு வரும்போது அந்த பங்கில் முதலீடு செய்த அனைவரும் அதிகபட்சம் பாதிக்கப் படுகிறார்கள். 

இந்த பி.என்.பி முறைகேடுகளால் பி.என்.பி மட்டும் பாதிக்கபடுவதில்லை, இந்த முறைகேட்டுடன் தொடர்புடைய மற்ற வங்கிகளும், நிறுவனங்களும் பாதிக்கப்படுகிறது. உதாரணமாக அலகாபாத் வங்கி, யூனியன் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எஸ்.பி.ஐ வங்கி, கீதாஞ்சலி ஜெம்ஸ் என்று பல நிறுவனங்கள  இதனுடன தொடர்பு கொண்டதாக தகவல்கள்  உள்ளது. இது போன்ற நேரங்களில் அந்தந்த பங்குகளின் விலையும் குறைகிறது. தினந்தோறும் வரும் புதிய புதிய வங்கி முறைகேட்டு தகவல்களால் வங்கி குறியீடு மிகவும் குறைந்து வருகிறது - நிப்டி பி.எஸ்.யூ வங்கி -22.8%,  நிப்டி வங்கி -11.6%

பங்கு
29-01-2018
09-03-2018
வித்தியாசம்
சதவிகித மாற்றம்
கீதாஞ்சலி ஜெம்ஸ்
65.35
15.8
-49.55
-75.8%
பி என்பி வங்கி
173.95
95.5
-78.45
-45.1%
அலகாபாத் வங்கி,
69.05
45.45
-23.6
-34.2%
யூனியன் வங்கி
137.75
93.6
-44.15
-32.1%
எஸ் பி வங்கி
311
253.15
-57.85
-18.6%
ஆக்சிஸ் வங்கி
605.4
505.3
-100.1
-16.5%
பி எஸ்   வங்கி குறியீடு
31125
27347
-3778
-12.1%
பி எஸ் சென்செக்ஸ் குறியீடு
36283
33307
-2976
-8.2%
நிப்டி பி எஸ் யூ வங்கி குறியீடு
3704
2858
-846
-22.8%
நிப்டி வங்கி குறியீடு
27498
24296
-3202
-11.6%

நாம் நமது நேரடி முதலீடுகளில் இந்த நிறுவனங்களில் குறிப்பாக வங்கிகளில்  முதலீடு செய்திருந்தால், நமது முதலீட்டுக்கு பாதிப்புகள் அதிகம் இருக்கும். இந்த முறைகேட்டால் வங்கி சார்ந்த முதலீடு அல்லது வங்கி சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் நஷ்டம் அதிகமாக உள்ளது. எனவே இந்த முறைகேடுகள் கற்றுத்தரும் பாடம் நாங்கள் முன்னர்  சொல்வது போல்  டைவர்ஸிபைடு மியூச்சுவல் பண்டு திட்டங்களை விட அதிக ரிஸ்க் வாய்ந்தது செக்டார் பண்டு (sector funds)  எனப்படும் இந்த வங்கி சார்ந்த திட்டங்கள் ஆகும். செக்டார் பண்டு ( sector funds)  எனப்படும் இந்த வங்கி சார்ந்த திட்டங்களின் வீழ்ச்சி -6.1%.  பரந்த பங்கு முதலீட்டு திட்டங்களின் (Diversified equity schemes) வீழ்ச்சி -3.35%.  எனவே ரிஸ்க் அதிகம் விரும்பாதவர்கள் பரந்த பங்கு முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். இது போன்ற குறிப்பிட்ட வங்கி திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் அதன் ரிஸ்க் தன்மையை உணரந்து  முதலீடு செய்ய வேண்டும்.

மியூச்சுவல் பண்ட திட்டங்களில் கடந்த ஒரு மாதத்தில் சதவிகித சரிவு ( as on 09-03-2018)
வங்கி திட்ட சராசரி
-5.46%
மல்டி கேப் திட்ட சராசரி
-2.94%
லார்ஜ் கேப் திட்ட சராசரி
-2.57%
மிட் கேப் திட்ட சராசரி
-2.69%
ஸ்மால் கேப் திட்ட சராசரி
-4.29%

பங்குகள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு முதலீடுகள் என்பது கப்பலில் பயணிப்பது போன்றது. சந்தையில் சரிவு போன்ற சூறாவளிகளும், முறைகேடு போன்ற பணம் விழுங்கும் திமிங்கலங்களையும் எதிர்கொண்டே ஆக வேண்டும். திமிங்கலங்கள் இல்லாத கடல்கள் இல்லை. அவை இல்லாத கடலில் பயணித்து அக்கரை செல்வது என்பது லாபம் தரும் விஷயமாகவும் இல்லை. எனவே எந்த கப்பலில் எந்த வழியில் சென்றால் சூறாவளியும் திமிங்கலங்களுங்களையும் சமாளித்து லாபம் பெறலாம் என்று பார்ப்பது நம் கவனமாக இருக்க வேண்டும். இதுவே நிதர்சனம்.

தற்போதய சூழலில் சிறந்த முதலீடு
புதிய முதலீடுகளை, ஒரே தடவையில் பங்கு சாரந்த திட்டங்களில் முதலீடு செய்யாமல், எஸ்.ஐ.பி  மூலம்  செய்வது  உசிதம். ஸ்மால் மற்றும் மிட் கேப்பில் புதிய முதலீடுகளை, ஒரே தடவையில் செய்வதை தவிர்கலாம். தற்போதய சூழலில் எஸ்.ஐ.பி  யை தொடர்வது, கடன் பத்திரங்களில் முதலீடு செய்யவது, குறுகிய கால கடன் திட்டங்களிலும் சேவிங்ஸ் வகையான கடன் திட்டங்களிலும் முதலீடு செய்யவது சால சிறந்த்து. 

Tuesday 13 March 2018

FAQ

கேள்வியும் நானே பதிலும் நானே


சில வருடங்களாக, நான் சந்திக்கும் முதலீட்டாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அதற்கு சரியான பதில்களையும் தொகுத்து முதலீட்டாளர்களின் நன்மை கருதி இங்கு தந்துள்ளேன்.



சந்தேகங்களுக்கு தீர்வு காண கேள்விகளை கிளிக் செய்யுங்கள் .





x----------------------------------------x-----------------------------x----------------------------------------------x

கேள்வி-1: என்னிடம் சுமார் ஏழு மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் உள்ளது, இத்துடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டுமா? அதன் வழி வகைகள் என்ன? ஏழு மியூச்சுவல் பண்ட் திட்டங்களுடனும் ஆதாரை  தனித்தனியாக இணைக்க வேண்டுமா? 



கேள்வி-2: மியூச்சுவல் பண்ட் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் போது நமக்கு வரி குறைய வாறய்புகள் உள்ளது என்று கூறுகிறார்களே? இது உண்மையா?

பதில்-2: ஆம் இது உண்மை தான். வங்கிகளில் நாம் பணத்தை வைப்பு நிதியில் வைக்கும்போது அதற்கு வருகின்ற வரியை, டீடிஎஸ் என்ற முறையில் பிடித்துக் கொள்கிறார்கள். ஆனால் நாம் மியூட்சுவல் பன்ட் கடன் பத்திரங்கங்களில் முதலீடு செய்யும்போது இந்த டீடிஎஸ் முறை கிடையாது. நாம் முதலீடு செய்த தொகையை மூன்று வருடங்களுக்கு பிறகு திரும்பப் பெறும்போது நமக்கு இன்டெக்ஸ் ரேஷன் செய்யும் முறையும் உள்ளது. இதன் காரணங்களாக நமது வரி குறைவாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.


கேள்வி-3: 2018-ல் மியூட்சுவல் ஃபண்டில் எங்கு முதலீடு செய்ய வேண்டும்?

பதில்-3: இதற்கு பதிலை பார்பதற்க்கு முன் ஒன்றை நன்கு நினைவில் கொள்ள வேண்டும். 2017-ல் நமக்குக் கிடைத்தது போல் ஈக்விட்டி திட்டங்களில் இருந்து லாபம் 25% மேல் இந்த வருடமும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. கடன் திட்டங்களிலும் இரண்டு இலக்க லாப வருமான விதங்களை பெறுவது சற்று கடினம் என்றே தோன்றுகிறது. மூன்றாவதாக தற்போதைய மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் விலை மிக அதிகமாக உள்ளதாக தோன்றுகிறது. இவற்றை வைத்து பார்க்கும் போது நமது வருமான எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டு, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். ஒரே தடவையில் திட்டங்களில் முதலீடு செய்யாமல் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம். கடன் திட்டங்களில் ஷார்ட் டேர்ம் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.


கேள்வி-4: மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் எவ்வளவு வருடம் முதலீடு செய்ய வேண்டும்?

பதில்-4: இது நிறைய பேர் அடிக்கடி கேட்கும் கேள்வி. நாம் வங்கியில் வைப்பு நிதியிலும் காப்பீட்டில் குறிப்பிட்ட காலம் கட்டாயம் பணத்தை முதலீடு செய்து வைத்திருந்து பழகிகிவிட்டோம். அதுபோன்று எந்த வித கட்டுப்பாடுகளும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு கிடையாது. நாம் முதலீடு செய்த தொகையை இரண்டு நாளிலும் திரும்ப எடுத்துக்கொள்ளலாம், இருபது வருடத்திற்கு பின் திரும்ப எடுத்துக் கொள்ளலாம். அது போலவே எஸ்.ஐ.பி ல் ஆறு மாதமும் கட்டலாம், அறுபது மாதமும் கட்டலாம். காலத்தின் கட்டாயம் இங்கே கிடையாது. அதுபோல் எந்தவிதமான அபராதத் தொகையும் குறைந்த காலத்திற்கு என்று பெரும்பாலும் கிடையாது. நாம் நமது குறிக் கோளுக்கு என்றபடி எஸ்.ஐ.பி ல் சேர்ந்து நீண்ட கால முதலீடு செய்வது உபயோகமாக இருக்கும். நீண்ட காலம் என்பது அவரவர்கள் தேவைகேற்ப மாறுபடும், எந்தவித கட்டாயங்களும் இங்கு இல்லை.

Monday 12 March 2018

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் ஆதார் இணைப்பு எப்படி மேற்கொள்வது?

My article on "How to link AADHAAR with Mutual Funds" has been recently published in "Nanayam Vikatan". Click here to read the link directly from vikatan website. The same article is given below.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுடன் ஆதார் அட்டையை இணைக்க, மார்ச் 31 கெடு தேதியாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. 


ஒருவர் பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் பல்வேறு ஃபண்டுகள் முதலீடு செய்திருப்பார்கள். அனைத்து ஃபண்ட்களுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதில்லை.  
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர் சார்ந்த சேவையை கேம்ஸ், கார்வி, சுந்தரம் மற்றும் ஃப்ராங்கிளின் டெம்பிள்டன் இந்தியா போன்ற நான்கு நிறுவனங்கள் அளித்து வருகின்றன.

இந்த  நிறுவனங்களில் நமது ஃபண்ட்கள் எந்த நிறுவனத்தால் நிர்வகிக்கப் படுகிறது என்று அறிந்து கொண்டு அந்த நிறுவனங்களில் ஆதார் எண்ணை இணைத்துவிட்டால் அந்த நிறுவனம், நிறுவனத்தில் உள்ள எல்லா திட்டங்களிலும் ஆதார் இணைக்கப்பட்டுவிடும்.

ஒருவர் உங்களது ஏழு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஏழு ஃபண்ட்களில் முதலீடு செய்துள்ளார் என வைத்துக் கொள்வோம். ஒரு ஃபண்ட்  கேம்ஸ்-லும், மற்ற ஆறு ஃபண்ட்கள் கார்வியிலும் இருந்தால் கேம்ஸ் மற்றும் கார்வியின் இணைய தளங்களுக்குச் சென்று ஆதார் என்னை இணைத்துவிட்டால்  ஏழு ஃபண்ட்களுடன் ஆதார் எண்  இணைந்து விடும்.

ஆன்லைன் மூலம் இணைக்க இயலாதவர்கள், மேற்கண்ட நிறுவனங்களின் அலுவலகங்கள், முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள், மற்றும் மேற்கூறிய சேவை நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு சென்று ஆதார் கார்ட், பான்கார்ட்  மற்றும் அதன் நகலுடன் சென்று இணைத்துக் கொள்ளலாம்.

ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்றால் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுகளில் பரிமாற்றம் செய்ய முடியாத நிலை, அதிலிருந்து பணத்தை எடுக்கவோ முடியாத நிலை உருவாகும். எனவே, சிரமம் பார்க்காலம். இதனை செய்து விடுவது மிக நல்லது.

TitBit - 28

TITBIT - 28 - Smart people can be bad investors

Date: 12-03-2018

Doctors, lawyers, scientists and engineers are some of the brightest, most educated people around. They are extremely well educated. Yet, even they tend to be horrible investors.

Key take away : Emotional intelligence (EQ) is probably even more important than regular IQ when dealing with Investments

Read more

1) Source Morning Star - http://www.morningstar.com/go/?uidm=1SKOGJ5D7BIE&murl=BUC7GCAH
2) Previous tidbits : https://radhaconsultancy.blogspot.in/2017/04/asset-allocation.html

Thursday 8 March 2018

Single Sign On - ஒற்றை அடையாளத்தில் நிதி விபரம்

மியூச்சுவல் ஃபண்ட் பரிமாற்றம் எளிதாக - தகவல் தொழில் நுட்பத்தின் வாயிலாக

தகவல் தொழில் நுட்ப இந்தியா, மத்திய அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டங்களில் ஒன்று நாம் இந்த புது ஆண்டில்(2018) தகவல் தொழில்நுட்பத்தை மியூச்சுவல் பண்ட்களில் எவ்வாறு எளிமையாக பயன்படுத்தலாம் என்று பார்ப்போமா..

இணையத்தில் இருந்து நிதி தகவல்களை பெறுவதற்கு பல்வேறு முறைகளும் நிலைகளும் உள்ளன. அவற்றில் முக்கியமான முதலீட்டாளர்களின் தேவைகள் இதோ… 
1) பண மதிப்பு விவரம் 
2) யூனிட்டுகளின் பரிமாற்று  விவரம்
3) நிதி அல்லாத விவரங்கள் (உதாரணமாக மின் அஞ்சல் முகவரி, பான் நம்பர்  (PAN)  ஆகும்). 

இந்த மூன்று வெவ்வேறு வகையான செயல்களை செய்ய, தகவல்களை அறிய பல விதமான முறைகள் நிதி தகவல் தொழில்நுட்பத்தில் உள்ளது. சில வழிமுறைகளில் சில செயல்களை மட்டுமே செய்யமுடியும். எந்தெந்த வழிமுறைகளில் எந்தெந்த செயல்களை செய்யலாம், செய்ய முடியாது, தவிர்க்க வேண்டும் என்று அறிந்துகொள்வது அவசியம் தானே!! முதல் எந்தெந்த வழிமுறைகள் இருக்கு என்பதை பார்த்து விடுவோம். இவற்றை அதன் அடிப்படை தத்துவங்களை வைத்து பிரிக்கலாம் மற்றும்  அது செயல்படும் கருவிகளை வைத்தும் பிரிக்கலாம். ஒவ்வொன்றிலும் நமது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் விதம் மாறிக்கொண்டே இருக்கும். நமக்கு பிடித்த, நம்மால் செய்யமுடிந்த, நல்ல வழிமுறையை நாம் தேர்வுசெய்ய வேண்டும். தத்துவார்த்தமான முறையில் இரண்டு வகை தொழில்நுட்பங்கள் உள்ளது. ஒன்று புஷ்(தள்ளு) (PUSH technology)  இன்னோன்று புல் (இழு ) (PULL technology). இது என்ன இழு பறி விளையாட்டு என்று பார்க்கிறீர்களா? ஆங்கில பெயர்கள் எல்லாம் அப்படி தான்!! ஏற்றுக்கொள்ளுங்கள்.. பேர் எப்படி இருந்தால் என்ன, தத்துவத்தை (concept) புரிந்துகொண்டு நமக்கு ஏற்றதாக இருந்தால் நன்கு உபயோக படுத்துவோமே!

தள்ளு  - PUSH TECHNOLOGY
புஷ்-யில் (PUSH technology)  நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ விவரம் உங்களை தேடி வரும். பெரும்பாலும் குறிப்பிட்ட முறையிலான தாக்கல் குறிப்பிட்ட தேதிகளில், தங்களை வந்து சேரும். உங்களது ஆத்திர அவசரத்துக்கு எல்லாம் அது கிடைக்காது. உதாரணம், என்.எஸ்.டி.எல் தகவல் அறிக்கை  (NSDL CAS Report , NSDL’s Consolidated Account Statement) இது பிரதி மாதமும் இரண்டாவது வார ஆரம்பத்தில் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும். இப்போதும் நீங்கள் நிதி சார்ந்த முதலீடு செய்து இருந்தால் இது வந்துகொண்டு தான் இருக்கும். மின் அஞ்சல் முகவரி கொடுத்திருந்தால்/பதிந்திருந்தால் கிடைக்கும். இது பொதுவாக நிறைய முதலீட்டாளர்களுக்கு தெரிய வில்லை. உங்கள் மின்னஞ்சல் இன் பாக்ஸ் (INBOX)  அல்லது ஐங் பாக்ஸ் (JUNK BOX) யில் , என் எஸ் டி எல் ( NSDL CAS) என்று தேடி பார்க்கவும்.. கிடைத்ததா?? இதன் திறவுகோல் உங்கள் (PAN) பான் நம்பர் தான்.

இதில் அடக்கம், முந்தய முடிந்த மாத தேதியில் உங்கள் பங்கு , பரஸ்பர நிதிகள் மதிப்பு மற்றும் அந்த ஒரு மாதத்தில் செய்த அணைத்து நிதி பரிமாற்றமும் , அதாவது பங்கு மற்றும் பரஸ்பர நிதிகளில் செய்த பரிமாற்றங்கள் இங்கே தரப்பட்டு இருக்கும். உங்களுது  காப்பீடு  விபரமும் இ முறையில் (insurance electronic form) இருந்தால் அதன் விவரமும் இதில் சேர்த்து தரப்படும். இந்த தகவலை பெறுவதற்கு நீங்கள் எதுவும் செய்யவேண்டியதில்லை. உங்கள் மின்னஞ்சல் , (PAN) பான் நம்பர் மட்டும் நீங்கள் முதலீடு செய்துள்ள எல்லா  நிறுவனத்திலும் இருக்க வேண்டும். இந்த என்.எஸ்.டி.எல் தகவல் அறிக்கை (NSDL CAS ரிப்போர்ட்டை) உபயோகப்படுத்துங்கள். அந்த மாதத்தின் சொத்து மதிப்பு விவரம் மற்றும் கடந்த 12 மாத சொத்து மதிப்பு விவரத்தை பல வண்ணங்களில் பார் கிராப் (Bar Graph) ஆக சித்திர வடிவிலும் பல வண்ணங்களோடு எளிதில் புரியும் படி தகவல் தர வல்லது. இதில் எல்லாமே செளககரியம் தானே என்று என்னவும் வேண்டாம். சில அசைவுகரியங்களும் உள்ளது. நமக்கு தேவை பட்ட தேதியில் இது கிடைக்காது. உதாரணமாக மாதத்தின் 20 ஆம் தேதி ஒரு அவசர தேவைக்காக பணம் எடுக்க நினைக்கும் போது அன்றைய மதிப்பு தெரிய வாய்ப்பில்லை. மேலும் 9 ஆம் தேதி கிடைக்கும் இந்த தகவல் ரிப்போர்ட்டில் அதற்கு முந்தைய மாதத்தின் மதிப்பு தான் இருக்கும். 9 ஆம் தேதியின் மதிப்பு இருக்காது. இந்த தடங்கல்களை தாண்டி வர கைகொடுப்பதே PULL technology. இதிலும் சில பல வழிமுறைகள் உள்ளன. அவற்றை பாப்போம்.

இழு - PULL TECHNOLOGY
இந்த PULL technology யில் நாம் விரும்பிய தேதியில் உதாரணமாக 20ஆம் தேதியில் அந்தந்த நிதி நிறுவன இணையதளத்திற்கு சென்று மெயில் பேக்  (Mail back report) சேவை மூலம், வேண்டிய தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். இந்த மெயில் பேக்  (Mail back report ) சேவையில் பல தகவல்கள் உங்களுக்கு தேவையான, முன்னரே குறிப்பிடப்பட்ட வடிவத்தில் இருக்கும். உதாரணம், லாபம் வந்த விவரம் (Dividend) , யூனிட் விற்று வாங்கி மாற்றிய விவரம், உங்களுக்கு அந்தந்த நிதி ஆண்டில் கிடைத்த லாப நஷ்ட விவரம் (Capital Gain), என்று பலதரப்பட்ட தேவைகளுக்கு ஏற்றவாறு தகவல்கள் ஒழுங்கு படுத்தப்பட்டு கிடைக்கும். அந்தந்த நிறுவன இணையதளத்திற்கு சென்று மெயில் பேக்-யில்  (Mail back section) உங்களுக்கு தேவையான தகவலை உறுதி செய்தால், செய்த மறுநிமிடத்திலோ அல்லது பெரும்பாலும் 24 மணி நேரத்துக்குள், இந்த தகவல் மின்னஞ்சலில் வரும்.

பரஸ்பரநிதியில் நமது யூனிட் விபரங்களை பராமரிக்கும் இரு முக்கிய நிறுவனங்கள், கேம்ஸ்  (Cams online) மற்றும் கார்வி (Karvy mfs)


இவர்களின் இணைய தளத்தில் இருந்து என்னென்ன தகவல்கள் பெறலாம் என்று அறிய அட்டவணை  பார்கவும்.

Mai back reports avaiabe in CAMS site - Table 1
Consolidated ActiveStatement
Consolidated Account Statement - CAMS+Karvy+FTAMIL+SBFS
Consolidated Portfolio Statement - Now with Dividend Payout Summary !!
Consolidated Transaction Details
Consolidated Realised Gains Statement
Single Folio Account Statement

காத்திருப்பது கஷ்டம் தான். எனவே தகவல் வருவதற்காக காத்திருக்காமல், அல்லது தகவல் கேட்டதையே மறந்து, கிடைத்த தகவலை உபயோக படுத்தாமல் இருப்பதை தவிர்க்க, தகவல் உடனுக்குடன் திரையில் தெரிந்தால் நல்லது தானே?? அதற்கும் வழி உள்ளது!! முன்னர் கூறியபடி இணைய இணைப்பில் பதிவு செய்து அந்த நுழைவுசீட்டை உபயோகப்படுத்தி பார்க்கும் போது தகவல்கள் திரையில் தெரியும். இதற்கு ஒவ்வொரு நிறுவனத்தின் இணையத்திற்கு நாம் சென்று பதிய வேண்டும். இதை தவிர்ப்பதற்கு ஒரே இடத்தில பதிந்து எல்லாவற்றையும் பார்க்கும் வசதியை பெற மேலே படியுங்கள்… அதற்கு முன் ஒரு முக்கிய பாதுகாப்பு அம்சம் குறித்த தகவல்: மெயில் பேக்  (Mail back report)  பெற நாம் இணையத்தில் பதிவு செய்ய வேண்டியதில்லை. அதற்குரிய பதிவு விவரங்களை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியதில்லை. எனவே யார் வேண்டுமானாலும் உமது தகவலை பெற முடியும் என்று அஞ்ச வேண்டாம். முதலிலேயே பதியப்பட்ட உங்கள் மின்னஞ்சலுக்கு தான் தகவல் செல்லும்.

கடந்த கட்டுரைகளில் கணினி மற்றும் கைபேசி மூலம் மின்னணு முறையில் நிதி பரிமாற்றங்களை குறிப்பாக பரஸ்பர நிதி பரிமாற்றங்களை எவ்வாறு செய்யலாம் என்று பார்த்தோம். ஒரு திட்டம் ஒரு நிறுவனம் என்று ஆரம்ப கால முதலீட்டாளர்களுக்கு இது எளிய செயல் தான். ஆனால் பல நிறுவனங்களில் ஏகப்பட்ட திட்டங்கள் வைத்திருப்போர்களுக்கு இது கடினமான செயலாக இருக்கும். காரணம் யாதெனில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனியாக உபோயகிப்பார் பெயர் (user name) கடவு சீட்டு (password) வைத்திருக்க வேண்டும். 7 - 8 நிறுவனம் என்று வரும்போது இதை நினைவில் கொள்வதே பிரம்மபிரயர்த்தனம் தான். ஒவ்வொரு முறையும்  யூனிட்டுகள் வாங்கும் போது இணையத்தில் வங்கி தளத்திற்கு சென்று பணத்தை நிதி நிறுவனத்திற்கு மாற்ற வேண்டும். இது எளிதாக இருந்தாலும் எல்லா முறையிலும் பணம் சரியாக நினைத்தபடி மாறும் என்று நிச்சயம் இல்லை. மாறாத தருணத்தில் அதற்குரிய மாற்று வேலையை செய்து பணம் பெறுவதும் கடினம் தான் (reversing the transfer). இவற்றை தவிர்த்து ஒரே இணைய தளத்தில் ஒரு user name மற்றும் ஒரு கடவு சீட்டு மூலம் எல்லா நிறுவனத்தின் எல்லா திட்டங்களை பார்க்கவும், வாங்கவும் , விற்கவும் முடியும் என்றால் மிக எளிது தானே. அதுவும் வங்கி தளத்திற்கு செல்லாமலேயே நமது கணக்கு கழிக்கப்பட்டு யூனிட் வாங்கப்படும் என்றால் ரொம்ப சவுரியம் தானே. வாழைப்பழத்தை திங்க கொடுத்து உரித்தும் கொடுத்தால் இனிமை தானே. இது எங்கே எங்கே என்கிறீர்களா? இதோ விவரம்

ஒற்றை அடையாளத்தில் நிதி விபரம்- மீயூச்சுவல் பண்ட் யுட்டீலீட்டீ (Single sign on – MF Utilites) உங்களது பரஸ்பர நிதி முதலீட்டில் எல்லா நிறுவனத்தில் உள்ள அணைத்து திட்டங்களின் விவரங்களை ஒரே இடத்தில பார்க்க உதவும் தளம் எம்.எப்.யூ (MFU) எனப்படும் மீயூச்சுவல் பண்ட் யுட்டீலீட்டீ (MF Utilities )என்கிற இணைய தளம் ஆகும். (https://www.mfuindia.com). இதை உபயோக படுத்துவதற்கு நாம் முதலில் நமது விவரங்களை கொடுத்து பதிய வேண்டும். பதிந்த உடன் அவர்கள் நமக்கு ஒரு குறியீடு எண் தருவார்கள் (CAN – Common Account Number). இந்த நம்பர் வைத்துக்கொண்டு எந்த நிறுவனத்தின் திட்டங்களையும் வாங்கவும் விற்கவும் இந்த தளத்தில் முடியும். நாம் முன்னரே வைத்துள்ள திட்டங்களின் விவரங்களையும் இந்த இணைய தளத்தில் ஒரே இடத்தில பார்க்க முடியும். இப்போது சொல்லுங்கள் இது மிக எளிய முறை தானே!!

மேலும் நன்கு புரிந்து கொள்ள தெளிவாக விளக்குகிறேன். இந்த CAN எண்னை பெறுவதால் 4 - 5 நிறுவனங்களில் உள்ள 7 - 8 திட்டங்களின் விவரங்களை ஒரே இடத்தில் பார்க்க முடிகிறது. உதாரணமாக, ஐ சி ஐ சி ஐ (ICICI) நிறுவனத்தின் வரி திட்டம் , (Reliance Growth திட்டம்) ரிலையன்ஸ் குரோத் திட்டம் , (Franklin Retirement)  பிராங்க்ளின் ரிட்டையர்மெண்ட் திட்டம் மற்றும் அவர்களின் பிராங்க்ளின் புளூசிப் திட்டம்  (Bluechip திட்டம்) ஆக மூன்று நிறுவனங்களின் நான்கு திட்டங்களையும் ஒரே இடத்தில பார்க்க முடிகிறது. இந்த வழி முறைகளை உபயோகப்படுத்தாத பட்சத்தில் இந்த மூன்று நிறுவனங்களுக்கும் தனி தனியாக இணைய இணைப்பு பெற வேண்டும். இது போக புதிதாக ஹச் டி எப் சி டாப் 200(HDFC Top 200) திட்டத்தை வாங்க வேண்டும் என்றாலும் (HDFC ) ஹச் டி எப் சி இணைத்தளத்திற்கு செல்லாமல் அல்லது (HDFC) ஹச் டி எப் சி க்கு உரிய காகித (form) படிவம் பூர்த்தி செய்யாமல் எம்.எப்.யூ  (MFU)  இணையத்தில் ஹச் டி எப் சி டாப் 200 (HDFC Top 200) திட்டத்தை வாங்க  முடியும். எனவே நாம் ஒவ்வொரு நிறுவனத்தின் இணையத்திற்கு சென்று வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒவ்வொரு நிறுவனத்தின் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த எம் எப் யூ  (MFU) மூலம் எந்த நிறுவனத்தின் எந்த திட்டத்தையும் வாங்க, விற்க, மாற்ற (BUY, SELL, SWITCH) ஒழுங்கு படுத்தப்பட்ட ஒரு காகித விண்ணப்பத்தையோ அல்லது மின்னணு முறையில் இணையத்திலோ வாங்க முடியும். 

அடுத்ததாக மிக முக்கிய பலன் ஒன்று உள்ளது. நமது மின்னஞ்சல் முகவரி அல்லது கைபேசி எண் மாறுகின்ற போது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தகவல் தந்து விவரங்களை மாற்றாமல் இந்த எம் எப் யூ (MFU)  இணையத்தில் தகவல்களை மாற்றினால் எல்லா நிறுவனத்திலும் நமது கணக்கில் அது மாற்றபட்டு விடும்.

என்ன வாசகர்களே, இந்த (MFU) முறையில் நிதி திட்டங்களை வாங்குவதும் விற்பதும் எளிதாக தானே இருக்கிறது? இதை உபயோகப்படுத்தி உங்களது முதலீட்டு திட்டங்களில் பரிமாற்றம் செய்வதையும், பராமரிப்பதையும் எளிதாக்குங்கள் . சந்தேகங்கள் இருந்தால் எழுதுங்கள்.

Tuesday 6 March 2018

LTCG Tax - புதிய வரியால் கூடும் எஸ்.ஐ.பி

My article on "Impact on SIP for Goal based investments because of LTCG Tax" has been recently published in "Nanayam Vikatan". Click here to read the link directly from vikatan website. The same article is given below with more tables for better understanding..

நீண்ட கால மூலதன ஆதாய வரியால் குறிக்கோளுடன் கூடிய முதலீட்டுகளின் மாதாந்திர எஸ் ஐ பி, கூடுகின்றது.

பட்ஜெட் பார்த்து ஒரு மாதம் ஆகிவிட்டது. வரிகள் கூடுகிறது. படித்துதான்.  நீண்ட கால மூலதன ஆதாய வரி பத்து சதவிகிதம் விதிக்கப்பட்டுள்ளது. தெரியும். ஆனால் தெரியாத, நாம் படிக்காத, கண்ணுக்கு எளிதில் புலபடாத, எளிதில் புரிபடதா, பாதிப்புகள், சில உள்ளது.  நாம் நமது குழந்தைகளுக்காக அவர்களது திருமணச் செலவிற்காக, அவர்களது உயர் படிப்பு செலவுக்காக, அல்லது நமது ஒய்வு கால வருமானத்திற்க்காக  சிறுகச் சிறுக தேனீ  போல எஸ் ஐ பி, ல் சேமித்து வரும் பணம் ,  படிப்பு, திருமணத்திற்க்கு, பிற்கால வருமாணத்திற்கு போதுமா? பொதுவாக நான் முன்னர் போட்ட திட்டங்களின் படி அதே அளவு பணம் குறிபிட்ட முதிர்வு தொகை நமக்கு கிடைக்குமா? சாத்திய கூறுகள் குறைவு.  நிச்சயமாக ஒன்று மட்டும் சொல்ல முடியும், நாம் கூடுதலாக சற்று பணம் சேமித்தால் மட்டுமே முன்னர் குறிப்பிட்ட அதே தொகையை நாம் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். என்ன சற்று குழப்பமாக உள்ளதா, வாருங்கள் விரிவாக இதை பார்ப்போம்.



முதலில் நாம், நமது வருங்கால தேவைகளுக்காக சுமார் ஒரு கோடி ரூபாய், பதினைந்து வருட முடிவில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்  மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து வருகிறோம்.பெரும்பாலும் நாட்பட்ட குறிக்கோளுடன் கூடிய தேவைகளுக்கு பணம் மியூச்சுவல் பண்ட் ஈக்விட்டி திட்டங்களிலேயே முதலீடு செய்யப்படுகின்றன. எனவே சமீபத்திய பட்ஜெட்டின் படி இந்தத் திட்டங்களில் நீண்ட கால மூலதன ஆதாய  வரியாக பத்து சதவிகிதம் செலுத்தப்பட வேண்டி உள்ளது. ஆகவே நமக்கு கிடைக்கும் முதிர்வு தொகையில்  ஆதாய வரி செலுத்திய பின் கிடைக்கும் தொகை சற்று குறைவு.  முடிவில் நமக்கு கையில் கிடைக்கும்  பணம் நான் முன்னர் போட்ட திட்டத்தின்படி கிடைக்கும் தொகையைவிட நிச்சயம் குறைவாகவே இருக்கின்றது. இதை பற்றி புரிந்துகொள்ள அட்டவணை ஒன்றை பார்கவும். எனவே நாம் முதலில் திட்டமிட்ட  ஒரு கோடி ரூபாய் பெற, நாம் சற்று சிரமப்பட்டு, மெனக்கெட்டு  அதிகமாக சேமிக்க வேண்டியுள்ளது. மாதா மாதம் சுமார் ரூபாய் 1500 அதிகம் செலுத்தினால் மட்டுமே நமக்கு அதே அளவு முதிர்வு தொகை கிடைக்க ஏதுவாக உள்ளது கீழே குறிப்பிட்டுள்ள  முதல் அட்டவணை, அடிப்படை கணக்குகளை வரி விபரத்தை கொண்டுள்ளது. நாம் எவ்வளவு  கூடுதல் பணம் சேமிக்க வேண்டும் என்பதை மற்ற அட்டவணைகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இதில் நான் முக்கியமாகக் கொண்டுள்ள அனுமானங்கள், கிடைக்கும் லாப வருமானம், முதலீடு செய்யும் வருடம். மற்றும் எல்லாக் காரணிகளும்  பட்ஜெட்டுக்கு முன்னும், பின்னும் ஒரே மாதிரியாக உள்ளது, வரியை தவிர என்பதாகும்.

முதல் அட்டவணை
பதினைந்து வருட முடிவில் ரூபாய் ஒரு கோடி பெற மாதா மாதம் முதலீடு செய்ய வேண்டிய தொகை
லாப சதவிகிதம்
12.5%
குறிக்கோளை அடைய வருடங்கள்
15
குறிக் கோளுக்கு தேவையான தொகை
                              1,00,00,000
மாதாமாதம் செலுத்தும் தொகை
                                       20,930
தொகை செலுத்தும் மாதங்கள் (14*12)
                                             168
நாம் செலுத்திய மொத்தத் தொகை ( 168*20930)
                                 35,16,227
எஸ் ஐ பி முடிந்த 14  வருட முடிவில் இருக்கும் தொகை
                                 95,47,532
15 வருட முடிவில் இருக்கும் தொகை
                              1,07,40,974
நமக்குக் கிடைத்த லாபத் தொகை
                                 72,24,746
வரி விலக்கு தொகை
                                    1,00,000
வரிக்கு உள்ளாகும் லாபத் தொகை
                                 71,24,746
வரி
                                    7,40,974
15 வருட முடிவில் இருக்கும் நிகர முதிர்வு தொகை
                              1,00,00,000

அட்டவணை இரண்டு இந்த வரி விதிப்பிற்கு பிறகு நாம் மாதா மாதம் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை காண்பிக்கின்றன.

அட்டவணை இரண்டு
தற்போதைய வரி விதிப்பிற்கு பின் மாதா மாதம், நமது குறிக்கோளுக்காக நாம் செலுத்த வேண்டிய தொகை - வருடங்களும் வருமான விகிதங்களும்
10%
12.50%
15%
10 வருடங்கள்
54229
46925
40437
15 வருடங்கள்
26355
20929
16463
20 வருடங்கள்
14362
10359
7356

அட்டவணை மூன்று வரி விதிப்பதற்கு முன் நாம் மாதா மாதம் எவ்வளவு பணம் செலுத்தினால் போதும் என்று எண்ணி திட்டமிட்டோம் என்பதைக் காண்பிக்கிறது.

அட்டவணை மூன்று
வரி விதிப்பிற்கு முன் மாதா மாதம், நமது குறிக்கோளுக்காக நாம் செலுத்த வேண்டிய தொகை - வருடங்களும் வருமான விகிதங்களும்
10%
12.50%
15%
10 வருடங்கள்
51798
44433
37997
15 வருடங்கள்
24781
19486
15204
20 வருடங்கள்
13336
9526
6715

அட்டவணை நான்கு இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை நன்கு காண்பிக்கிறது இந்த அட்டவணையில் பத்து, பதினைந்து, இருபது வருடங்கள் என்ற காலங்களில் மாதா மாதம் முதலீடு செய்தால் எவ்வளவு பணம் தேவை என்பதைக் காண்பிக்கிறது அதேபோல் நமக்குக் கிடைக்கும் வருமானம் 10%,(பத்து), 12.5% ( பண்டிட் புள்ளி அஞ்சு), 15% ( பதிணைத்து), பத்து என்பது குறைந்த பட்ச மாகவும் பதினைந்து என்பது அதிகபட்சமாகவும் இருக்கும் தளத்தில் நாம் சேமிக்கும் மாதா மாதம் தொகை எப்படி மாறுபடுகிறது என்பதை காண்பிக்கிறது. 

அட்டவணை நான்கு
மாதா மாதம், நமது குறிக்கோளுக்காக நாம் செலுத்த வேண்டிய கூடுதல் தொகை - வருடங்களும் வருமான விகிதங்களும்
10%
12.50%
15%
10 வருடங்கள்
2431
2492
2440
15 வருடங்கள்
1574
1443
1259
20 வருடங்கள்
1026
833
641

நிப்டியின் வருமான லாப சதவீதத்தை பார்க்கும் போது கடந்த பத்து, பதினைந்து, இருபது, வருடங்களில் சுமார் பதினொன்று சதவிகிதம் (11%) முதல் பதினான்கு சதவிகிதம் (14%) வரை நீண்டகால முதலீட்டுக்கு  கிடைத்து வந்திருக்கின்றது. எனவே சராசரி சதவிகிதமாக (12.5%) பன்னெண்டு புள்ளி ஐந்து சதவீதம் வருமானத்தை வரும் காலங்களில் கணக்கிற்கா எடுத்து கொள்வது உசிதமாக இருக்கும்

இதில் நாம் முக்கியமாகக் குறித்துக் கொள்ள வேண்டியது பத்து வருடத்தில்  முதிர்வு தொகை பெற, நாம் ஒன்பது வருடங்கள் எஸ் ஐ பி,  செலுத்த வேண்டும் பத்தாம் வருட முடிவில் முதிர்வு தொகை பெறலாம் என்ற நோக்கில் கணக்கிடப்பட்டுள்ளது.

என்ன முதலீட்டாளர்களே,புரிந்ததா?  நடக்கும் எஸ் ஐ பி, யில் சற்று டாப் அப் செய்யுங்கள், மறந்து விட்டு விடாதீர்கள்.