Saturday, 28 August 2021

தொடரும் நாமினேஷன்

இந்த கட்டுரை விகடனில் படிக்க தொடவும் 

சக்ஸ்ஸிவ் நாமினேஷன் - தொடரும் நாமினேஷன்


முதலீடு மற்றும் காப்பீடு களில் நாமினேஷன் எவ்வளவு அவசியம் என்று பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே.  நாமினேஷன் செய்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடுமா என்றால் சில சமயங்களில் அது தான் இல்லை பொதுவாகவே கணவன் மனைவியையும்,  மனைவி கணவனையும் நாமினேஷன் செய்வது  என்பது வழக்கத்தில் உள்ளது.  இந்த கோவிட் காலத்தில் இருவரும் இறந்துவிட நேரும் போது அவர்கள் செய்த முதலீடு அல்லது காப்பீடு எவ்வாறு மற்றவர்களுக்கு மாறுகின்றது என்பது சற்று சிக்கலான செயலாகிறது. இதை தவிர்க்க வழி உள்ளது அதை இங்கு பார்க்கலாம்


நாமினேசன் என்பது ஒரு முதலீடு  அல்லது காப்பீடு செய்யும் பொழுது முதலீட்டாளர் அல்லது காப்பீட்டாளர் இறந்தபோது, அதில் கிடைக்கும் பணம் அந்த நாமினிக்கு செல்ல வேண்டும். இது பொதுவான ஒன்று. இந்த நாமினேஷன் இல் மூன்று வகைகள் உண்டு


  1. தனி நபர் (சிங்கிள்) நாமினேஷன்


முதல் வகை, தனி நபர் ( சிங்கிள்) நாமினேஷன் என்பதாகும் இதில் ஒருவர் இறந்து விட்டால் முழுப் பணமும் அந்த நாமினி இடம் அளிக்கப்படும்


  1. ஒருவருக்கு மேற்பட்ட கூட்டு  நாமினேஷன் ( Joint or Multiple Nomination)


இரண்டாவது வகை,  இது ஜாயிண்ட் அல்லது மல்டிபிள் நாமினேஷன் எனப்படும் அதிகபட்சம் மூன்று பேர் நாமினியாக பதிவு செய்ய முடியும் உதாரணமாக அந்த மூவரையும் ஏ, பி, சி என்று வைத்துக்கொள்வோம் முதலீடு அல்லது காப்பீடு செய்யும் பொழுது ஏ விற்கு  30 சதவீதமும் பிவிற்கு  40% மற்றும் சி விற்கு 30% என்று முதலில் பதிவு  செய்தால், பின்னர் அதே சதவிகிதத்தில் அவர்களிடம் பணம் கொடுக்கப்படும்


  1. சக்ஸ்ஸிவ் நாமினேஷன் - தொடரும் நாமினேஷன் ( successive Nomination)


மூன்றாவது வகை இது புது மாதிரியானது. இதற்கு சக்சஸ் நாமினேஷன் அல்லது அல்டர்நெட் நாமினேஷன்( Alternative Nomination)  என்று பெயர் இதில் நாம் முதலீட்டாளர் அல்லது காப்பீட்டாளர் இறந்து விட்டால் முதலில் ஏ விற்கு  100 சதவீதமும் செல்ல வேண்டும் என்று கூறலாம். ஏதாவது ஒரு காரணத்தால்  எ  இறந்துவிட்டாலோ  இப்பபொழுது பணம் பி இடம் 100 சதவீதமும் செல்ல வேண்டும்.  எ , பி  இருவரும் இல்லாத பட்சத்தில் சி இடம் அந்த 100% செல்லும்.  இது மாதிரியான நாமினேஷன்க்கு சக்சஸ் நாமினேஷன் என்று பெயர்





இரண்டாவது வகைக்கும், மூன்றாவது வரைக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு, இரண்டாவது வகையில் மூன்று பேர் நாமினேஷன் என்றால் மூவருக்கும் மொத்த பணமும் அவரவர் விகிதாசாரத்தில்  போய் சேருகிறது ஆனால் அதே சமயம் மூன்றாவது வகையில், யாராவது  ஒருவருக்கு மொத்த பணம் போய் சேரும். அந்த ஒருவர் யார் என்பது யார் முதலில் உயிருடன் இருக்கிறார், மற்றும் வரிசையில் எந்த இடத்தில இருக்கிறார்  என்ற வகையில் அமைகிறது




இந்த கோவிட் / பெருந்தொற்று (பனெடெமிக் ) காலங்களில் சக்சஸ் நாமினேஷன் செய்வது  மிகவும் உசிதம். இது தற்சமயம் இன்சூரன்ஸ் அல்லது காப்பீடு செய்யப்படும்போது மட்டுமே உதவுகின்றது. காப்பீடு  எல்ஐசி மூலம் செய்யும் போது  இந்த மாதிரியான சக்சஸ் நாமினேஷன் பெற படிவம் 5194 rev.  உபயோகித்து சக்ஸ்ஸிவ் நாமினேஷன் பதிவு செய்யலாம்


சக்ஸ்ஸிவ் நாமினேஷன் பதிவு செய்வது காப்பீடு எடுக்கும் போது செய்யலாம். அதை தவறவிட்டவர்கள், காப்பீடு நடைமுறையில் இருக்கும்போதும் செய்யலாம். 


இளம் வயதில் காப்பீடு செய்யும் போது  அவர்களது தந்தையையோ தாயையோ நாமினேஷன் செய்யும்பொழுது காப்பீடு செய்தவர் இறப்பதற்கு முன்னே நாமினேஷன் செய்யப்பட்டவர் இறந்து விடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது.  இது போன்ற தருணங்களில் இந்த சக்சஸ் நாமினேஷன் என்பது மிகவும் உபயோகமாக இருக்கும்


வங்கி மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் நாமினேஷன் 


தற்சமயம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் அல்லது வங்கிகளில் இது போன்று மூன்றாவது வகையான சக்சஸ் நாமினேஷன் கிடையாது.


மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அல்லது வங்கிகளில் முதலீடு செய்யும் போது தனி நபர் நாமினேஷன் தவிர்த்து ,இரண்டாவது வகையான ஒன்றுக்கு மேற்பட்ட நபர் நாமினேஷன்  செய்வதன் மூலம் நாம் ஓரளவு பணம் சரியான இடத்திற்கு போய்ச் சேருமாறு பார்த்துக் கொள்ள முடியும்


சோலோ அக்கௌன்ட் ஆக  இல்லாமல் இ ஆர் எஸ் அக்கௌன்ட் ( E or S ) ஆக இருந்தாலும், நாமினேஷன் செய்வது நல்லதே 


நாமினேஷன் செய்யப்பட்டவர் இறந்து போகும்போது கையோடு நாமினேஷனை மாற்றி விடுவதும் நல்லதே


இந்த கட்டுரை பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் பகிரவும் 

உங்களது கருத்துக்களை இங்கு கிளிக் செய்து தரவும்  feedback here

முந்திய கட்டுரைகளை  படிக்க 

  எஸ் ஐ பி 


Monday, 23 August 2021

Successive Nomination


Successive Nomination - Alternate Nomination

 It is often well known how necessary nominations are in investment and insurance. Does nominating always guarantee a smooth future disbursal? The answer may be is a no. Even if the documentation is done, sometimes it is very difficult to get the disbursal after an unfortunate event. It is very common that the husband nominates wife, and in turn wife nominates the husband. In current covid period, if both passed away in quick succession, getting the disbursal by their kins is a mammoth task. There is a way to avoid these complications. Let us understand that better.

 When an investor or insurer dies after making an investment or after purchasing an insurance, the disbursal money available must go to their nominee. This is something basic about nomination and very common knowledge. There are three types of nominations.

 

1.   Individual (Single) Nomination

 

The first type is individual (single) nomination in which if one dies, the entire money is given to the single/sole nominee.

 

  1. More than one or joint nomination (Multiple Nominations)

 

The second type, which is joint or multiple nomination, can be registered with more than one nominee. The maximum allowed nominees are three different people. For example, let us assume the three nominees are A, B and C. 30% for A, another 30% for B and 40% for C. This nomination has been registered by the investor/insurer. In the case of disbursal, total outstanding is disbursed to all the three nominees in the given proportion.

 

  1. Successive Nomination   

 

This third type is a new variation. This is called successive nomination or alternate nomination. In this case, if an insurer dies, disbursal first goes to A. All 100% to A. If A dies for some reason, then the 100% money must now go to B. If neither A nor B are alive, then C will get the 100% of money. Such nominations are called successive nomination.

 

The main difference between the second type and the third type is that, in the second case, three nominations mean that the entire amount of money goes to all the three in their assigned proportions, but in the case of third type, successive nomination, the total amount of money goes to one of the three, the entire 100%. That person is determined by the order and if they are alive or not.

 


Successive nomination during these covid/pandemic periods are very advisable. It helps in a smooth disbursal of amount to nominee when invested or insured person is not alive. In the case of LIC, to avail successive nomination, insurer can fill and apply by using Form 5194 rev. This can be done at the proposal stage or also at the running stage of the policy.

 

In the case of young insurers, their father or mother is the one who is usually nominated. The chances of both the insured dying before the insurer is high. In such instances, this successive nomination is very useful.

 

Nomination in Bank and Mutual Fund Investments

 At present, there is no third kind of successive nomination in mutual fund investments or bank deposits.

 It is advisable to go for multiple nominations when investing in mutual fund investments or banks.

 It is better to nominate even if it is an E or S account.

 It is also advisable to change the nomination manually when the nominated person passes away.

Sunday, 9 May 2021

முதலீட்டாளர்கள் நலனில் செபி

 

ஃபண்ட் மேனேஜர்களுக்கு செபியின் புதிய கட்டளைகள்! முதலீட்டாளர்களுக்கு சாதகமா..?

பங்குச்சந்தைகளில் நிறுவனம் சார்ந்தவர்களுக்கு கிடைக்கும் தனிப்பட்ட தகவல்களை கொண்டு பங்கு சந்தையில் லாபம் பார்ப்பது, பங்குச்சந்தைகளில் விளையாடுவது என்பது ஒரு தடை செய்யப்பட்ட செயலாகும். இது இனசைடர் டிரேடிங் (Insider Trading) எனப்படும்.

 

சமீபத்தில் நடந்தேறிய பிராங்கிளின் ஆறு கடன் பண்டுகள் மூடு விழாவிற்கு பிறகு, பங்குச்சந்தைகளில் நடைபெறும் இன்சைடர் டிரேடிங் போன்று பண்டுகளிலும் நடந்திருக்கலாம் என்ற தகவல்கள் கசிந்து வருகின்றன. மேலும் சில பங்கு மேலாளர்கள்/ பங்கு நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் லாபம் நஷ்டம் எங்களுக்கு பெரிய விஷயம் இல்லை, எங்களுக்கு  நல்ல பெரிய சம்பளம் கிடைத்தால் போதும் என்ற ரீதியில் பண்டுகள்  நடத்தபடுவதாக ஆங்காங்கே பார்க்கின்றோம். இது முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும் செயல்கள் அல்ல.

 

பண்டு மேலாளர்கள் தாங்கள் நிர்வகிக்கும் ஃபண்டுகளில் நம்பிக்கை வைக்கிறார்களா? ஆம் எனில், தங்களது சொந்த பணத்தை அதில் முதலீடு செய்கிறார்களா? என்ற விபரங்கள் அவ்வப்போது மீடியாவில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு சில பண்டு நிறுவனங்கள், இதை கட்டயாமாக்கி பின்பற்றி வருகின்றது. மற்ற பல நிறுவனங்கள் இதை கண்டு கொள்வதில்லை. இது மிக சிறந்த திட்டம் என்பதெல்லாம் ஊருக்குதான் உபதேசம்.  இன்று வரை இதற்கான சட்டம் ஏதும் இல்லை.  இதை மாற்றி இனி வரும் காலங்களில் வரும் ஜூலை 1 ம் தேதி முதல்   பின்பற்ற வேண்டிய விதிகள், மற்றும் புதிய நடைமுறைகள் செபி அறிமுகப்படுத்தி உள்ளது. அவற்றின் சாரத்தை  பார்க்கலாம் வாருங்கள்

 

செபி தரும் புதிய நடைமுறைகள் - ஸ்கின் இன் த கேம் ( Skin in the game)

 

1.      பண்டு மேலாளர்கள், பண்டு நிறுவன மேலாளர்கள் மற்றும் பண்டை நிர்வகிப்பதில் சம்பந்தப்பட்டவர்கள், அனைவரும் தங்கள் சம்பளத்தில் இருந்து 20% கட்டாயமாக தாங்கள் நிர்வகிக்கும் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்.

2.      பண்டு மேலாளர் ஒரு திட்டத்திற்கு மேலாக இரண்டு மூன்று திட்டங்களை நிர்வகிக்கும் சமயங்களில் அவர் நிர்வகிக்கும் மொத்த பண்டு தொகையின் விகிதாச்சாரத்தில் இந்த 20% முதலீடும் அவர் நிர்வகிக்கும் எல்லா பண்டுகளிலும் அவரது சொந்த முதலீடு  இருக்க வேண்டும்.

3.      இந்த 20% ஒதுக்கீட்டு முதலீடு மூன்று ஆண்டுகள் கட்டாயம் அந்த பண்டுகளில் இருக்க வேண்டும். அதற்கு முன் அவர்களால் அந்த பணத்தை எடுக்க இயலாது. அவர்கள் நிறுவனங்கள் மாறினாலும். இந்த மூன்று ஆண்டுகள் லாக் (Lock in Period) அவசியம்.

4.      பண்டு மேலாளர்கள் சம்பளத்தில் அவர்கள் வரி கட்டிய பின் வரும் நிகர சம்பளதில் இருந்து 20% இந்த முறையில் முதலீடு செய்யப்படும்.

5.      இன்டெக்ஸ் பண்ட் (Index funds) இடிஎஃப் (ETF), ஒவர் நைட் பண்டுகள்(overnight funds) மற்றும் குளோஸ் எண்டெட் பண்டுகளுக்கு ( closed ended funds)   இந்த நடைமுறை பொருந்தாது.

6.      பண்டு மேலாளர் மீது குற்றங்கள் ஏதும் நிரூபிக்கப்பட்டால் இந்த 20% முதலீடு அவரிடம் கொடுக்கப்பட மாட்டாது.

 

வேலையில் லாபத்திற்கு தக்கவாறு அல்லது வேலையில் சிறந்த வேலைக்கு என்று சம்பளம் கொடுப்பது புதிய முறையல்ல (performance-based pay). இந்த முறையை பண்டு மேலாளர்களுக்கு கட்டாயமாக்கி இருப்பது நல்ல தொடக்கம். இந்த முறைக்கு ஆங்கிலத்தில் ஸ்கின் இன் த கேம் என்று கூறுவார்கள்.

 

சாதகங்கள்

 

இந்த முறையில் ஸ்கின் இன் த கேம் என்ற வகையில் நடைமுறைப்படுத்தும் போது, இது முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும் என்று நம்பப்படுகின்றது. அதே நேரத்தில் நிச்சயமாக லாபம் அதிகரிக்கும் என்று கூறுவதற்கில்லை. பண்டு மேலாளர் மிகுந்த கவனத்துடனும் ஆர்வத்துடனும் செயல்படுவதால் நல்லமுறையில் பண்டு நடைபெறும் என்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.

 

பாதகங்கள்

 

இந்த முறையில் முதலீட்டாளர்களுக்கு எந்த பாதகமும் இல்லை. அதே சமயத்தில் இந்த புதிய முறையை பண்டு மேலாளர்களும் பண்டு நிறுவன அதிபர்களும் வரவேற்கவில்லை. காரணம் அவர்கள் சில கஷ்ட நஷ்டங்களை எழுப்புகிறார்கள்.

1.      ஒரு கடன் திட்ட மேலாளர் பணம் முழுவதும் அவரது கடன் திட்டஙகளில் முதலீடு செய்யபடுகின்றது. அவரது தனிபட்ட விருப்பம் ஈக்விட்டி திட்டமாக இருக்கலாம்.

2.      பண்டு நிறுவன மேலாளரின் (CEO/CIO) முதலீடு எல்லாம் 20 / 30 திட்டங்களுக்கு மேலாக பிரிந்து போகின்றது. இதனால் அவரது முதலீட்டில் அளவுக்கு அதிகமாக திட்டங்கள் இருப்பதால் அவர்களுக்கு கிடைக்கும் லாபம் குறைகின்றது.

3.      அவர்களுக்கு வீட்டிற்கு எடுத்து செல்லும் சம்பளம் குறைகின்றது. இதனால் அவர்களுக்கு அன்றாட தேவைகளுக்கு சில சமயங்களில் பணம் பற்றாமல் இருக்கலாம் அல்லது அவர்களுக்கு வீட்டு கடன் போன்ற பெரிய தொகையை செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.

4.      அவர்கள் நடத்தும் பண்டின் தன்மைக்கும் அவர்களது சொந்த விருப்பு வெறுப்புகளின் தன்மைக்கும் வேறுபாடு ஏற்படும்போது இந்த நடைமுறையை பின்பற்றுவது அவர்களுக்கு சிக்கலாக இருக்கலாம் - உதராணம். ஹபிரிட் பண்டு மேலாளருக்கு லார்ஜ கேப் பண்டுகளில் விருப்பம் இருக்கலாம்.

 

முடிவாக

 

இந்த புதிய நடைமுறை முதலீட்டாளர்களுக்கு நன்மையே பயக்கும். பண்டு மேலாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு பண்டிற்கு வரும் நஷ்டங்களை தவிர்பார்கள் என்று நம்பப்படுகின்றது. இது வரவேற்கத்தக்க அம்சமே. செபிக்கு நன்றி சொல்வோம்.

இந்த கட்டுரை பிடித்திருந்தால் சமூக வலைத்தளங்களில் பகிரவும் 

உங்களது கருத்துக்களை இங்கு கிளிக் செய்து தரவும்  feedback here

முந்திய கட்டுரைகளை  படிக்க 

சந்தையின் உச்சத்தில் லாபத்தை நிரந்தரமாக்குங்கள்

நிதி நலம் பேண, உடல் நலம் பேணும் ஃபண்டுகள்

பங்குகள் பண்டுகள்  ஒரு அலசல்

ரிஸ்க்கோ மீட்டர் 3

நாமினேஷன் அவசியம்

சந்தையில் ராபின்ஹூட் முதலீட்டாளர்கள்

எஸ் ஐ பி யை தொடர்வதில் சிரமமா?

முதலீடுகளில் எச்சரிக்கை

எஸ் ஐ பி 


Tuesday, 4 May 2021

Skin in the Game

SEBI on investors' welfare

it is a prohibited practice to profit from the stock market and play on the stock exchanges with the non-published price sensitive information available to the company's insiders on the stock exchanges.   If someone uses the private information for the benefit in stock markets, then it is called Insider Trading.

After the recent closure of franklin's six debt funds, reports are leaking that the like in stocks, insider trading like events happened in funds also.  we also came to know that fund managers and fund houses focus is always on their profits and salary rather than investor interest. This is not beneficial to investors.

Do fund managers believe in funds they manage? If yes, do they invest their own money in it? Some of these details are rarely available in the media.  A few fund houses like Kotak etc. following these principles and ask their fund managers to invest in their schemes. many other companies do not give any importance to these principles.   To date, there is no law for this. This is going to change from July of this year. SEBI has introduced rules and new procedures to   be followed from july1.      Let us see the essence of them.

Newly recommended procedures by SEBI with respect to fund managers remuneration- Skin in the Game  

 

1.     Fund managers, senior fund house employees and those involved in managing the fund must invest 20% of their salary in funds they manage.

2.   When the fund manager,  manages two or three schemes, this 20% investment should be in all his schemes, proportionate to total assets under his management.

3.     This 20% allocation investment must be in funds managed by him for three years (Lock in Period of 3 years). They will not be able to withdraw that money before the lock in period. Even if they change companies. These three years lock is applicable

4.       20% of the net salary after all taxes will be invested in this manner.

5.       This procedure is not applicable to Index fund, ETF, overnight funds, and close end funds.  

6.       If the fund manager is not eligible to get this investment, if he is found guilty of any offences,

It is not a new method to pay, based on work which is known in corporate circles as performance-based pay. Making this method compulsory for fund house / AMC team is a good start. This method is known as Skin in the Game.

Advantages

It is believed that this will benefit investors when implemented in this manner as Skin in the Game, while certainly it will not guarantee any performance increase. The expectation is that the fund manager will be very careful and enthusiastic in their investment choices, which will increase the safety /reduce the risk and indirectly help to get good performance. In turn this will help the investors 

Disadvantages 

At the same time, the new proposed system is not welcomed by the fund managers and the fund houses because they are raising some concerns.

1.       A credit fund manager’s 20% lock in investments will be in credit funds only whereas His individual preference may be in equity funds.

2.     20% lock in investments of the Fund CEO/CIO is getting diversified over 20/30 schemes, thus reducing their profits due too much diversification.

3.     Their take home salary is impacted. This may impact heavily on their daily needs or may have difficulty in paying large sums of money, such as home loans.

4.       It may be difficult for them to follow this practice when there is a difference between the nature of the fund they run and the nature of their own likes and dislikes – for example, the Hybrid fund manager may prefer the large cap funds. 

Finally 

This new practice is beneficial to the investors because it will induce good habits for better management of the schemes. It is believed that fund managers will be very careful and avoid losses to the fund.  This is a welcome feature. Let us thank SEBI.