Sunday 5 March 2017

குறிக்கோளுடன் கூடிய முதலீடுகள் (Goal Based investments)

பாதி கிணறு தாண்டுவது ஆபத்தானது, எல்லாம்  அறிந்த்துதான். அதுபோலவே, அரைகுறை முதலீட்டு அறிவும் ஆபத்தானதான். நான் வாங்கிய பங்கோ, திட்டமோ, 50%  குறைந்துவிட்டது, இது சரியில்லை, பெரிய ஏமாற்று வேலை, இது வெறும் சூதாட்டம், என்பவர்கள் ஏராளம். படித்தவர்களும், பாமரனை போல், ஆயிரம், குறைகள், சொல்வோருமுண்டு. பங்குகள், மற்றும் பரஸ்பர நிதி திட்டங்கள் மதிப்பு ஏறுவதும், இறங்குவதும், சகஸம்தான. இதை மறுப்பதிற்க்கில்லை. பங்கு சந்தையின் ஏற்றத்தையோ, இறக்கத்தையோ, நீங்களோ, இல்லை, நானோ, நிச்சியம், மாற்றமுடியாது. நம்மால் மாற்ற முடியாததை  பற்றி நாம் கவலை கொள்ள தேவையில்லை. இந்த தெளிவு இல்லாம்ல், பங்குகள், பரஸ்பர நிதி திட்டங்கள், பற்றி அறியாமல், புரியாமல், இந்த பெயரை கேட்டவுடன், நஷ்டம்தான், என்று அரைகுறை அறிவோடு அலராமல், முழுவதும் புரிந்து முதலீடு செய்யலாமே.


படித்தவர்கள், நாம் பார்தவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்  கூறும், டிப்ஸ், ஏராளம். உதாரணமாக,  பங்கு சந்தை இறங்கும் போது வாங்கி, ஏறும் போது விற்கவேண்டும். மிக எளிமையான சூத்திரம்தான் இதிலும் சூட்சும்ம் இருங்கின்றது. நமது, திட்ட மேளாளருக்கூட, எப்போது இறங்கி முடிந்து, மாற்றம் வரும், ( market bottom) எப்போது ஏறிமுடிந்து, மாற்றம் வரும்(Market peak)  என்பதை அறிதியிட்டு கூற முடியாது. ஆனால் நாம் தினமும் என்ன செய்கின்றோம். இன்று வாங்கி, நாளை விற்று, அல்லது இன்று வாங்கி இன்றே விற்று  லாபம்,  பார்க்க என்னுகின்றோம். இந்த நிலையில், சந்தையின் ஏற்ற இறக்கம், நமது, லாபத்தில், மிக்க, அதிக தாக்கத்தை ஏற்படுத்தகிறது.

 இவ்வாறு இல்லாமல் சந்தையின் ஏற்ற இறக்கத்தை பார்காமல், "எல்லா நாளும், நல்ல நாளே" என்று இன்றே முதலீட்டை தொடங்குகள். என்ன இப்படி சொல்கிறார், என்று ஏளனம் வேண்டாம், காரணமாகத்தான் சொல்கின்றேன். இன்று முதலீடு செய்துவிட்டு, அடுத்த மாத இறுதிக்குள், அதிக லாபம், பார்க எண்ணாமல், ஒரு குறிக்கோளுடன் முதலீட்டை தொடங்குகள். உதாரணமாக என்ன குறிக்கோளுடன் முதலீட்டை தொடங்கலாம்.


முதலாவதாக, செட்டியாரின் கவலை, படிப்பு. குழந்தைகளின், பெரிய படிப்பு. அவர்கள், இஞ்சினியராகவோ, டாக்டரவகோவ, இல்லை இதர செலவு கூடிய படிப்பு படிக்க,  படிக்க சேரும் காலத்தில அதிக பணத்தேவைபடும்.  இதற்கு பணம் சேர்கவேண்டும். இந்த குறிக்கோளுடன், படிப்பு தேவைகளுக்காக, முதலீடு தொடங்கலாம்.

இரண்டாவது, ஆச்சிகளின் கவலை, கலியாணம், காலபோக்கில், மெத்தை தலையனை கணக்குகள், குறைந்து போல் தெரிகிறது. தட்டு முட்டு சாமான்கள், குறைந்தாலும, கலியாண செலவுகள், ஏறுகிறதே தவிர, ஏளிமையானதாக இல்லை. மகள் கலியாண செலவுகளுக்காக, பணம் சேர்ப்பது, நல்ல குறிக்கோளே

மூன்றவதாக, நமக்காக, " நம்க்கு நாமே" என்பது போல், சாந்தி முடிந்த கையோடு, சாய்வு நாற்காலியில், சாய்ந்து காலாட்ட, வங்கியில், "கொழுத்" பணம் இருக்கவேண்டும். சமீபத்தில், பத்மஸ்ரீ டாக்டர்  நடராஜன் (முதியவர் சிறப்பு மருத்துவர்) புத்தகத்தில் படித்தேன், வங்கியில் பணம் இருக்கும் முதியவர்கள், மிகுந்த தண்ணம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர் நோக்குகிறார்கள். அதேசமயம் மகன் / மகள் / உற்றவர்கள்/ மற்றவர்களை சார்ந்து இருக்கும் முதியவர்களிடம் ஒய்வு கால வாழ்கை பயம் சிறிது உள்ளது. நமது ஒய்வு கால வாழ்கையில்  மிகுந்த தண்ணம்பிக்கையோடு வாழ்க்கையை சந்திக்க, பணம் சம்பாதிக்கும் காலத்தில், பணம் சேர்க்கவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.  இந்த குறிக்கோளுடன் பணம் சேர்பது அவசியம்.


இது போன்ற குறிக்கோளுடன் மாத மாதம், பல வருடங்கள், பணம் சேர்பதால், சந்தை ஏறி இறங்குவதை பற்றி, அதிகம், கவலைகொள்ள தேவையில்லை. நாம் வாங்கும், திட்டங்களின், சராசரி, விலை, குறைவாக இருக்கும், காலபோக்கில், லாபம், அதிகமாக இருக்க வாய்புக்கள் அதிகம். பல ஆய்வுகளின் படி, பரஸ்பர நதியில் பத்து வருடங்களுக்கு மேல் முதலீடு செய்யும் போது, லாபம் வருகின்றது. நமது குறிக்கோள் நிதர்சனமாகும் தருணம் வரும்போது, நாம் சேமித்த பணத்தை லாபத்தோடு எடுத்தகொள்ளலாம். சந்தை எவ்வாறு உள்ளது, என்று பாராம்ல், நமது தேவைக்கு, அன்று யாரிடமும், செல்லாம்ல். நமது பண்த்தை, நாம், எடுத்து, தேவையை பூர்த்திசெய்து கொள்ளலாம். இப்போது சொல்லுங்கள், இதில், எங்கு சூதாட்டம் என்று.

இது போன்று குறிக்கோளுடன் கூடிய முதலீட்டு விபரங்களை தனித்து பார்த்து, தேவையான அளவு பணம் சேர்க்க, ப்ராங்களின், டெம்பிளிடன், நிறுவனம் சிறப்பாக, ஒவ்வொரு குறிக்கோளுக்கும், எவ்வளவு பணம் சேர்த்து இருக்கின்றோம், என்பதை தெளிவாக காண்பிக்கும்

குறிக்கோளுடன் கூடிய முதலீடின் சிறப்பும்சங்கள்
1. மாத மாதம் சேமிப்பு
2. நீண்ட கால சேமிப்பு
3. வாங்கும் திட்டத்தின் சராசரி விலை குறைவு
4. லாபம் அதிகம் பெறவாய்புகள் அதிகம்
5. குறிக்கோள் நிதர்சனமாகும் போது நமது பண்த்தை நாமே எடுத்துகொள்ளலாம்
6. குறிக்கோளுக்கு தேவையான பணம் சேரும்போது தன்னம்பிக்கை கூடுகிறது.
7. கல்விக்காவோ, கலியாணத்திற்கு சேர்க்கும் பணத்தை எடுத்து வேறு செலவு செய்யாமல் இருப்பது


No comments:

Post a Comment