Tuesday, 2 January 2018

TitBit - 25

TITBIT - 25 - Do not put all eggs in the same basket

Date: 01-01-2018

Wish you a very Happy New Year 2018!!

In this new year, make one new resolution "Do not put all eggs in the same basket"


Key take away:
Let it be Real estate, gold or bank deposit - Single asset concentration is risky

Solution:

Diversify through asset allocation model in mutual funds - let us start investments in mutual funds through debt based mutual funds, which is less volatile.



Read More:
1) நான்கு வழிமுறைகள், வட்டி விகித சரிவிலிருந்து மீள (4 ways to beat interest rate blues)
https://radhaconsultancy.blogspot.in/2017/03/4-ways-to-beat-interest-rate-blues.html)

2) Previous tidbits : https://radhaconsultancy.blogspot.in/2017/04/asset-allocation.html

3) Nothing fixed about fixed-income funds. Take a step back to appreciate the importance of risk-adjusted returns in fixed income funds. From <https://www.valueresearchonline.com/story/h2_storyview.asp?str=200689> 

4)How to pick debt mutual funds: 5 steps to big profits. From <http://www.financialexpress.com/money/mutual-funds/how-to-pick-debt-mutual-funds-5-steps-to-big-profits/931674/> 

Friday, 29 December 2017

Q&A

Welcome to Q & A - Free support for your queries 


You can read answers for common questions under page FAQ by clicking here
You can also read Question and answers as published in nanayam vikatan by clicking here
if you have different query write to us  by clicking the link given below

Ask any question and you will find your answer!!

 Click here to enter your question

  • Any Mutual Fund, any Scheme related query will be answered.
  • General Personal Finance query will be answered.
  • You will receive case to case answer.
  • Not a call center. No template replies.
  • Possible for one on one video discussion.
  • Your question will be kept confidential. 
  • Beneficial for investors.
  • Free of cost.

Disclaimer - We will take every step to answer your queries to our best of knowledge depending upon the service request / information sort. No obligation at our end and given as service.





Wednesday, 27 December 2017

எஸ்.ஐ.பி முதலீடு... தெரிந்ததும் தெரியாததும்!

My new article "10 things to know about SIP investment" has been recently published in "Nanayam Vikatan" dated 24/12/2017. Click here to read the link directly from vikatan website. The same article is given below..

சந்தை ஏறுகிறதோ, இல்லையோ மியூச்சுவல் ஃபண்டில் முதலீடாகும் தொகை உயர்ந்து கொண்டே இருக்கிறது. பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் முதலீடாகும் தொகை  குறைகிறமாதிரி தெரியவில்லை. இதனால்  மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், இந்த மகிழ்ச்சி எவ்வளவு நாள் நிலைக்கும்?


இந்தக் கேள்விக்குப் பல பதில்கள்; பல ஆருடங்கள். சந்தை இறங்கிவிட்டால் எஸ்.ஐ.பி  முதலீடு நின்றுவிடும் என்று ஒருசாராரும், இன்னொருசாரார் எஸ்.ஐ.பி இன்னும் பல வருடங்களுக்குத் தொடரும் என்றும் ஜோசியம் சொல்கிறார்கள். இந்தக் கேள்விக்கான சரியான பதில் ஒருபக்கம் இருக்கட்டும். எஸ்.ஐ.பி பற்றி அடிப்படையான விஷயங்களை முதலீட்டாளர்கள் புரிந்துகொண்டு முதலீடு செய்கிறார்களா என்பதுதான் நாம் எழுப்ப விரும்பும் முக்கியமான கேள்வி.

இதற்கு ஒரு சின்ன பரீட்சை வைப்போமா? சரி வாருங்கள் பரீட்சை எழுதலாம்... பாஸா பார்க்கலாம்?

1) எஸ்.ஐ.பி என்பது?
a) எனக்கு வேறு திட்டம் எல்லாம் வேண்டாம். எஸ்.ஐ.பி மட்டுமே போதும். அதுவே போதுமானது.

b) எஸ்.ஐ.பி என்பது திட்டம் இல்லை. அது ஒரு முதலீட்டுமுறை அவ்வளவே.

2) எஸ்.ஐ.பி யாருக்கு உகந்தது?

a) யார் வேண்டுமானாலும் எந்த வயதிலும் எப்போது வேண்டுமானாலும், தொடங்கலாம், கவலையில்லை.

b) எஸ்.ஐ.பி குறிப்பிட்ட வயதினருக்கு, குறிப்பிட்ட வருவாய் உள்ளவர்களுக்கு ஏற்ற முறை.

3) எஸ்.ஐ.பி-யில் லாபம்?

a) நிச்சயம் லாபம் கிடைக்கும். கவலையின்றி இருக்கலாம். சந்தை எப்படிப் போனால் எனக்கென்ன என்று இருக்கலாம்.

b) குறுகிய காலத்தில் லாபமும், நஷ்டமும் சகஜமே.

4) எஸ்.ஐ.பி பயன்பாட்டுக்கு வந்து எவ்வளவு காலம் ஆகியிருக்கிறது?  

a) இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருக்கலாம்.

b) காலங்காலமாக இருக்கிறது.

5) எஸ்.ஐ.பி என்பது ஒரு பரந்து விரிந்த முதலீடா?

a) ஆம், ஒரே தடவை முதலீடு செய்யாமல் ஒவ்வொரு மாதமும்  முதலீடு செய்வதால் அது ஒரு பரந்து விரிந்த முதலீடே.

b) எஸ்.ஐ.பி என்பது ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் தொடங்கு வதால், இது அவ்வளவாகப் பரந்த விரிந்த முதலீடாக இருக்காது.

எல்லா கேள்விகளுக்கும் நீங்கள் a-வை டிக் செய்திருக்கிறீர்களா? நீங்கள் ஃபெயில். இரண்டு கேள்விகளுக்கு மட்டும் நீங்கள் b-யைத் தேர்வு செய்திருக் கிறீர்களா? நீங்கள் பாஸ். ஐந்து கேள்விகளுக்கும் நீங்கள் b-யைத் தேர்வு செய்திருந்தால், உங்களுக்கு 100% மார்க்.

இந்த பரீட்சையில் பெயிலான வர்கள் எஸ்.ஐ.பி பற்றி நன்கு தெரிந்துகொள்ள, அதிலுள்ள பத்து முக்கியமான விஷயங்களை விளக்கமாகப் பார்ப்போம்.

1) நாற்பதுக்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்களில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் உள்ளன. அதில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து எஸ்.ஐ.பி தொடங்க லாம். எஸ்.ஐ.பி என்பது திட்டம் இல்லை - அது ஒரு முதலீட்டு முறை. எஸ்.ஐ.பி என்பது, குறிப் பிட்ட இடைவெளியில், குறிப் பிட்ட காலத்துக்கு, குறிப்பிட்ட தொகையைக் குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்வதே.




2) எஸ்.ஐ.பி என்பது ஒரு அத்தியாவசியமான முதலீடல்ல.  இது, குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்பட்சத்தில் முதியவர்களுக்கு அவ்வளவு ஏற்றதாக இருப்பதில்லை. அவர்களுக்குத் தேவை எஸ்.டபிள்யூ.பி (SWP). அதுபோல, மாதாமாதம் தவறாமல் சம்பளம்  வருகிறவர்களுக்கு எஸ்.ஐ.பி வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். 

3) எஸ்.ஐ.பி பற்றி இன்னொரு தவறான கருத்தும்  கண்ணோட்டமும் உள்ளது. எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்தால், நஷ்டமே வராது, லாபம் மட்டும்தான். இதுவும் மிகத் தவறானது. எஸ்.ஐ.பி என்பது ஒழுங்கு முறையில், பணம் சேமிக்க உதவும் கருவி. லாப நஷ்டம் என்பது, திட்டம், அதன் செயல்பாடு, சந்தை நிலவரம் போன்றவற்றைப் பொறுத்து நாளுக்கு நாள் மாறும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், ஏறுகிற சந்தையில், முழுத் தொகையையும் ஒரே சமயத்தில் முதலீடு செய்வது எஸ்.ஐ.பி-யைவிட நல்ல பலன் தரும். இறங்குகிற சந்தையில், முழுத் தொகையையும் முதலீடு செய்வதை விட, எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதே லாபத்துக்கான வழி.  

4) நிறைய பேர் எஸ்.ஐ.பி என்பது சில வருடங்கள் முன்புதான் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய முதலீடு என்று நினைக்கிறார்கள். ஆனால், அது பல ஆண்டு காலமாக  பயன்பாட்டில் இருக்கிறது. பயன்படுத்துவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.  

5) எஸ்.ஐ.பி என்பது ஒரு பரந்துவிரிந்த முதலீடா? இல்லவே இல்லை. சிலர் எஸ்.ஐ.பி-யில் ஒரே தவணையில் முதலீடு செய்யாமல் பல காலம் செய்வதால், அது பரந்துவிரிந்த முதலீடாகக் கொள்ள முடியாது. காரணம், நாம் எஸ்.ஐ.பி-யில் ஒரே திட்டத்தில் பல வருடங்கள் முதலீடு செய்தாலும், பணம் ஒரே திட்டத்தில்தான் முதலீடு செய்யப்படும்.  அதேசமயம், பரந்துவிரிந்த முதலீடு என்றால் கடன், தங்கம், பங்குச் சந்தை என வெவ்வேறு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். எனவே, எஸ்.ஐ.பி-க்கும் பரந்துவிரிந்த முதலீட்டுக்கும்  இருக்கும் வித்தியாசத்தைக் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

6) முடிவு தேதி கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்றில்லை என்றாலும், எஸ்.ஐ.பி-யைக் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் கட்ட வேண்டும். முடிவு தேதி தராதபட்சத்தில், எஸ்.ஐ.பி தொடர்ந்து கொண்டே இருக்கும். நீங்கள் வேண்டும்போது, எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுவனத்திடம் எழுத்து மூலமாகச் சொல்லி நிறுத்திக்கொள்ளலாம். எஸ்.ஐ.பி-யை ஆன்லைனிலும் ஆரம்பிக்கலாம்.

7) எஸ்.ஐ.பி-யின் முடிவில் நாம் வாங்கிய யூனிட்களின் சராசரி விலை, எஸ்.ஐ.பி காலத்தில் இருந்த அதிகபட்ச விலைக்கும் குறைந்தபட்ச விலைக்கும் இடையில் இருக்கும். உதாரணமாக, அதிகபட்ச விலை ரூ.12 என்றும், குறைந்தபட்ச விலை ரூ.8 என்றும் இருந்தால், ஒருவர் வாங்கிய யூனிட்களின் சராசரி விலை 12-க்கும், 8-க்கும் இடையில் இருக்கும்.  நாம் ரூ.9 என்று வைத்துக்கொள்வோம். இது ரூ.12-க்கும் குறைவு. ஆனால், இது எட்டைவிட அதிகம். சராசரி விலை குறைவாக இருப்பதால், லாபம் அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு.

8) எஸ்.ஐ.பி-யில் ஒரு மாதம் சில பல காரணங்களால் பணம் கட்ட முடியாமல் போனால், நிதி நிறுவனங்கள் அதற்கு அபராதத்  தொகையை  வசூலிப்பதில்லை. எஸ்.ஐ.பி தேதியைத் தவறவிட்டால் அதே மாதத்தில் வேறு தேதியிலும் கட்டிக்கொள்ளலாம். அதேசமயம், வங்கியிலிருந்து மாதா மாதம் பணம் போவது தடைப்பட்டு வங்கியில் பணம் இல்லாமல் திரும்பிச் செல்லும்போது அந்தந்த வங்கி அபராதத் தொகை வசூலிக்கும் நிலை ஏற்படலாம். எனவே, ஜாக்கிரதை.

9) ஒவ்வொரு மாதமும் எஸ்.ஐ.பி முறையில் பணம் கட்டும்போது பெருபாலான வங்கிகள் கட்டணமாகப் பணம் ஏதும் வசூலிப்பதில்லை. இருந்தாலும், சில வங்கிகள் இதற்கும் கட்டணம் என்கிற பெயரில் ஒரு சிறு தொகையைப் பிடிக்கின்றன. எனவே, நீங்கள் வங்கிக் கணக்கு வைத்துள்ள வங்கி இந்த விஷயத்தில் எப்படி நடந்துகொள்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.  

10) டாப் அப் எஸ்.ஐ.பி, ஃப்ளெக்ஸ் எஸ்.ஐ.பி, வேல்யூ எஸ்.ஐ.பி ஃப்ளெக்ஸ் எஸ்.ஐ.பி, வேல்யூ எஸ்.ஐ.பி எனப் பல வகை உண்டு என்பதையும் மறந்துவிடாதீர்கள். 

இந்தப் பத்து விஷயங்களையும் நீங்கள் புரிந்துகொண்டால், இனி நீங்கள் எஸ்.ஐ.பி-யில் முதலீடு செய்யலாம்.

Tuesday, 19 December 2017

தனி தமிழ் இனி தமிழ்

My article in Tamil Literature got published in a book which was released recently on Dec 8th, 2017 at Karaikudi.

தனி தமிழ் இனி தமிழ்.. தலைப்பு நன்றாகத்தான் இருங்கின்றது. நமது தாய் தமிழ் மொழி, நமக்கு மட்டுமல்ல, மொழிகளுக்கெல்லாம் தாயாக விளங்குபவள். செம்மொழி, மிகவும் புரதான மொழி என்று  பெயர் பெற்றவள், முதல், இடை, கடை சங்கங்கள் கண்ட மொழி. இந்த மொழி வளர்கின்றதா ? இல்லை மெல்ல சாகின்றதா? சாகின்றது என்று தொல்காப்பிய தொன்மையான மொழியை சொல்ல முடியவில்லை, ஆனால், அதே சமயம், தமிழ் வளர்கின்றது என்று அறுதியிட்டு ஆனித்தராமாகவும் கூற முடியவில்லை.  இந்த சூழ்நிலையில் இனி தமிழ் பற்றி இங்கு பற்றி சிந்திப்போம்.


ஒரு சாராரின் கருத்து படி, இன்னும் 50 அல்லது 100 வருடங்களில், தமிழ் மற்றும் ஏனைய மொழிகள் குறையும். தமிழ் பிழைத்து இருந்தால், எப்படி இருக்கும் என்பது, தற்பொழுது பட்டிமன்றத்திற்கு ஏற்ற தலைப்பாக இருக்கிறது. . இணயத்தால், ஆங்கிலத்தின் ஆதிக்கம், அதிகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தாய் தமிழ் மொழயாக கொண்டவர்கள் ஆங்கில பள்ளிகளில் ஆயிரமாயிரம் நண்கொடைகள் கொடுத்து பயிலுவது அநேகம் பேர் அறிந்த்துதான். சுதந்திர இந்தியாவில் மொழிகள் மூலம் பிரிக்க பட்ட, மாநிலங்களை, இன்னும் சில, பல வருடங்களில் அதேவகையில் அறியபட முடியுமா? மிக பெரிய கேள்விதான்

காரணம் சில கண்ணில் படுகின்றது. எளிய தமிழ் மக்களால் படிக்கபடுகின்ற தமிழ் செய்தி பத்தரிக்கை தினத்தந்தி, Dt Next ஆக ஆங்கில்தில் விரிகின்றது. இதற்கு மாறாக ஆங்கில்தில் அரசனாக இருந்த The Hindu,  தி இந்து வாக பரிமளிக்கிறது. இது தமிழின் வளர்ச்சியா? இல்லை சுருக்கமா? எப்படியிருந்தாலும். இது தற்போதய நிலவரம். இன்னும் பத்தாண்டுகளில், பத்திரிக்கைகளை இந்த வடிவத்தில் படிப்பவர்களை, விரல் விட்டு எண்ணிவிடலாம்!  பத்திரிக்கைகள் , புத்தகங்கள், கடிதங்கள், காவியங்கள் எல்லாம் அழிந்துவிடுமா? இல்லவே இல்லை, எல்லாம், சகலமும், கைபேசியில் அடங்கிவிடும்

Before you என்பது B4U ஆகிவிட்டது. இது குறுஞ்செய்திகளின் வடிவமா? இன்றைய இளசுகளின் எளிய நடையா?
எப்படியிருந்தாலும், ஒன்று தெளிவாக தெரிகின்றது. மாற்றம் என்பது, மாற்றமுடியாதது . மாற்றத்தை தமிழும் தழுவிகொள்ளவேண்டும். தமிழ், கைபேசியில் விரிவாக உலா வரவேண்டும். கடந்த பத்தாண்டுகளில் கணினியில் மொழிகளின் பரிணாமம் வளர்ச்சி கண்டுள்ளது. இது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். ஆனால் சீன மொழி , இந்தி மொழி போல் தமிழ் வளரந்துள்ளதா என்பது கேள்விகுறியே.. Unicode முறையில் எல்லா மொழிகளும் கைபேசி, மற்றும் கணினியில் பரவி வருகின்றது. இந்த முறையில், எழுத , படிக்க, பகிர முடியும், இருந்தும் நமக்கு வரும் குறுஞ்செய்திகளில் 100 இல் 2  கூட தமிழல் இல்லை.  தமிழின் பயன்பாடும் பரவலும் மிக மிக குறைவாக இருப்பதாகவே தோன்றுகிறது.

உதாரணமாக தமிழ் மேல் நான் கொண்ட காதலால், நிதி பற்றி வழக்குதமிழில் வலைப்பூ ஒன்று வரைந்தேன்(radhaconsultancy.blogspot.in)  இதில் Google AdSense ஐ இணைத்திட முயன்றபோது, Google அதை மறுத்தது . காரணம். வலைபூ தமழில் இருந்ததுதான். தமிழ் வலைபூ பார்வையாளர்கள் மிகவும் குறைவாக இருப்பதுதான்! இந்த சூழலில் தமிழை வளர்ப்பது எப்படி? தமிழ் வலைபூ பார்வையாளர்கள் அதிகரிக்கவேண்டும். பார்வையாளர்களை கவர நல்ல தரமான, படைப்புகள் வலம் வரவேண்டும். அவை ஆங்கிலத்தில் இருப்பதைவிட சிறந்ததாக இருக்கவேண்டும். இந்த படைப்புகள் எல்லாம், தமிழ் குறுஞ்செய்தியாக, Whatsapp செய்தியாக, வலைப்பூ வாக பரந்து விரியவேண்டும், இதற்கு முதலில் பார்த்தது போல தாய் தமிழும் மாறவேண்டயிருக்கும். பல தமிழ் செயலிகள் வர வேண்டும் ( apps)

தற்போது, தமிழும், ஆங்கில புலமை பெற்றவரக்ள், பலர். இவர்கள், தனது எண்ணங்களை பகிர நிணைக்கும் போது, பயன்படுத்துவது, ஆங்கிலம். காரணம், எளிய செயலிகள் பல ஆங்கிலத்தில் உள்ளது. கைபேசி மற்றும் கணினி விசை பலகைகள், ஆங்கிலத்திற்கு ஏற்றவாறு உள்ளது. தமிழ் வளர எளிய பல செயலிகள் புழக்கத்தில் வரவேண்டும். Vandhan என்று ஊளிட்டு செய்தால் வந்தான், என்று தரும் Google transliterate செயலி இருக்கிறது, இது போல் நமது தமிழில் சிந்திக்கபடும் கருத்களை தமிழ் வடிவமாக்க எளிய செயிலகள் வேண்டும்.

நாம் ஆங்கிலத்தில் பேசியதை அப்படியே தட்டச்சுசெய்து  தர, Google மற்றும் Microsoft Crotona  உள்ளது. இதை செய்தியாக , கட்டுரையாக்குவது எளிது. இதேபோல் நாம் தமிழில் பேசியதை அப்படியே தமிழில் தட்டச்சுசெய்து  தர மென்பொருள்கள் வேண்டும், நன்கு உபயோகத்தில் வர வேண்டும். இதன் மூலம், நாம் தமிழில் சிந்திப்பதை, பேசி, தமிழ்  மிண்ணனு வடிவத்தில் எளிதில் மாற்ற முடியுமானல், தமிழில் வலையில் பகிர தடைகள் இருக்காது

இன்னுமொரு உதாரணம், Interest என்பதற்கு வட்டி, என்ற தமிழ் சொல் புழக்கதில் உள்ளது, அதே போல் Dividend என்பதற்கு சரியான சொல்லை களஞ்சியத்தில் தேடலாம், ஆனால் களஞ்சியத்தில் கிடைத்த கலைசொல்லை (ஈவுத்தொகை)  பயன்படுத்தி எழத பெறும் செய்திகள் முதலீட்டாளரை சென்றடையுமா? சந்தேகந்தான்! டிவிடெண்ட் என்று எழதுவது புரிவது போல், தூய தமிழ் சொல் (ஈவுத்தொகை )புரியாத போது தமிழ் வளர, நாமும் மாறுவோமே. தமிழை எளிமையாக்குவோம். நிதர்சனங்களுக்கு ஏற்றவாறு உபயோகிப்போம். தமிழை அழிவிலிருந்து காப்போம்.

முடிவாக, மொழி என்பது, ஒருவர், மற்ற ஒருவருக்கோ, பலருக்கோ, தமது எண்ணத்தை புரிய வைக்க உதவுவது. அது ஒலியாக இருக்கலாம். சைகையாக இருக்கலாம், எண்ணம் புரிந்துவிட்டால், அது தவறில்லை என்று கருதி, மாற்றங்களை தழுவி, முன்னேறலாம்.

Thursday, 30 November 2017

TitBit - 24

TITBIT - 24 - Height of Mutual Fund AMC stopping inflows

Date: 30-11-2017

Key take away: 
Valuations are high - It is difficult in this market to spot winners. 
It is good practice, AMC stopping in flows when they feel it is difficult to manage new fund flows.

Recommendation: 
It is evident that, we as investor should be very careful in investing in 100% equity products now. 
It is the time to enter conservative low equity products as of now.

1) Link  source : ET - Dates 30-11-2017 - https://economictimes.indiatimes.com/markets/stocks/news/idfc-focused-equity-fund-to-restrict-inflows/articleshow/61851855.cms

2) Previous tidbits : https://radhaconsultancy.blogspot.in/2017/04/asset-allocation.html



Wednesday, 29 November 2017

IAP Dec 2017

Title – Investor Awareness Program (IAP) Dec 2017

Topic - Usefulness of Technology/ Excel sheet in Finance

Venue:
The Institute Of Company secretaries
9, Wheatcrofts Road,
Nungambakkam,
Chennai

Date 03-12-2017

Click the links below to download or read more:

 Details  Links
 IAP ppt presentation in pdf form   Click here
 Access Excel examples used in the ppt  Click here
 Access Excel file with all mutual fund app links and web links  Click here
 Read more about the single sign on article in Tamil  Click here
 Read more about Data in finger tips article in Tamil – (This article was published in Nanayam  vikatan)   Click here
 Read our newsletter – Digital times in English  Click here
 Give feedback about this session and content  Click here

Tuesday, 28 November 2017

TitBit - 23

TITBIT - 23 - The real risk is not taking risk!!

Date: 26-11-2017

Key take away: 
Chennaities hold mere 3.1% in financial assets out of their total investment portfolio.

Recommendation: 

Increase the financial assets through mutual funds, and do not go overboard in other assets.




1) Link  source : TOI - Dates 24-11-2017 - https://timesofindia.indiatimes.com/city/chennai/why-chennaiites-bank-more-on-real-estate-gold-than-shares/articleshow/61774600.cms


2) Previous tidbits : https://radhaconsultancy.blogspot.in/2017/04/asset-allocation.html