Showing posts with label MF Tamil Articles. Show all posts
Showing posts with label MF Tamil Articles. Show all posts

Sunday, 9 October 2016

PE-STP: சந்தை மதிப்புக்கேற்ப முதலீடு


This article has been recently published in "Nanayam Vikatan" dated 04/10/2016. Here's the link to read my article online, if you have online access in vikatan group.

http://www.vikatan.com/nanayamvikatan/2016-oct-09/mutual-fund/124074-new-investment-scheme-will-give-more-profit.art

The same article is given below.

சமீபத்தில் உச்சத்தைத் தொட்ட சந்தை தற்போது சுமார் இரண்டு, மூன்று சதவிகிதம் குறைந்து வர்த்தகம் ஆகிறது. இந்த சிறிய இறக்கத்தினால் சந்தையின் மதிப்பு (valuation) என்பது பெரிய அளவில் குறைந்துவிடவில்லை. எனவே, அதிக விலை தந்தே பங்குகளை வாங்கவேண்டிய கட்டாயம் முதலீட்டாளர்களுக்கு இருப்பதால், இப்போதைக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்யாமல் ஒதுங்கி நிற்பதே சரி என பல முதலீட்டாளர்கள் நினைக்கின்றனர். பங்கு முதலீட்டாளர்கள் மட்டுமல்ல, ஃபண்டுகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும் இதே மாதிரியான எண்ணத்துடன் எப்போது சந்தை இறங்கும் என்கிற எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

உள்ளபடி பார்த்தால், இப்படி ஒதுங்கி நிற்கத் தேவையே இல்லை. நம் கையில் மொத்தமாக இருக்கும் பணம் இருந்தாலோ அல்லது தீபாவளி போனஸ் கிடைப்பதாக இருந்தாலோ அல்லது 7-வது கமிஷன் மூலம் கணிசமான தொகை கிடைப்பதாக இருந்தாலோ, சந்தை இறங்கும் வரை அதை வங்கிக் கணக்கில் வைத்திருப்பதைவிட பிஇ - எஸ்டிபி ஃ முதலீட்டு முறை மூலம் சந்தையின் மதிப்புக்கேற்றபடி நம் பணத்தை சரியாக முதலீடு செய்ய முடியும். தற்போது மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸின் சராசரி பிஇ ரேஷியோ (Price Earning Ratio) 20.78-ஆக உள்ளது. 
சென்செக்ஸின் நெடு நாளைய சராசரி பிஇ 18.6. சென்செக்ஸின் அதிகபட்ச பிஇ 29-ஆகவும் (2000 வருடம்), குறைந்தபட்ச பிஇ 12 ஆகவும் (2008 வருடம்) இருந்திருக்கிறது. இதிலிருந்து நமக்கு சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரியவருவது, சந்தையின் மதிப்பு சற்று அதிகம் என்பதே. 

கையில் இருக்கும் மொத்த பணத்தையும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒரே நேரத்தில் பங்கில் முதலீடு செய்யாமல், மதிப்பு அதிகமாக இருக்கும்போது குறைவாகவும் குறைவாக உள்ளபோது அதிகமாகவும் முதலீடு செய்யவேண்டும். 
ஆனால் மதிப்பு எப்போது அதிகமாக உள்ளது அல்லது குறைவாக உள்ளது என்பதை நாமே கண்டறிவது கொஞ்சம் கடினம். இதைச் செய்வதற்கு டைனமிக் ஈக்விட்டி ஃபண்டுகள் செய்கின்றன. கடந்த காலங்களில் இந்த வகை ஃபண்டுகள் ஓரளவு நல்ல வருமானத்தைத் தந்திருக்கின்றன.

இப்போது டைனமிக் ஃபண்டுகளைவிட சிறப்பான முதலீட்டுக்கு வழிவகுக்கும் ஒரு முதலீட்டுத் முறை வெளியிட்டிருக்கிறது ஐடிஎஃப்சி நிறுவனம் பிஇ - எஸ்டிபி (PE - STP) என்கிற முதலீட்டுத் முறை யில் நாம் முதலில் முதலீடு செய்யும் தொகை கடன் சார்ந்த திட்டங்களில் (Debt fund) முதலீடு செய்யப்படும். அதிலிருந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் பங்கு சார்ந்த திட்டத்துக்கு எஸ்டிபி (STP - Systematic Transfer Plan) மூலம் மாற்றப்படும். இப்படி மாற்றும்போது ஒவ்வொரு மாதத்திலும் ஒரே அளவிலான தொகையை மாற்றம் செய்யாமல், சந்தை மதிப்பு குறைந்திருக்கும்போது கூடுதல் தொகையையும், தற்சமயம் போல் சந்தை மதிப்பு அதிகமாக இருக்கும்போது குறைந்த தொகையும் மாற்றுவதன் மூலம் நமக்கு அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பினை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.  
இந்தத் முதலீட்டு முறையின் படி, பிஇ 16-க்குக் கீழ் இருக்கும்போது நாம் கடன் திட்டத்தில் இருந்து பங்கு திட்டத்துக்கு மாறும் தொகை ஐந்து மடங்காகவும் (Green Zone), பிஇ 16-19-ஆக இருக்கும்போது மாறும் தொகை இரண்டு மடங்காகவும் (Yellow Zone), பிஇ 19-க்கு மேல் இருக்கும்போது மாறும் தொகை ஒரு மடங்காக (Red Zone) இருக்கும். (பார்க்க படம்-1)  


ஆக, சந்தை இறங்கி இருக்கும்போது பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிக முதலீடும், சந்தை ஏறி இருக்கும்போது குறைந்த முதலீடும் செய்கிறோம். இவ்வாறு செய்வதால் சாதாரணமாக செய்கிற எஸ்டிபியைவிட பிஇ - எஸ்டிபி மூலம் செய்யும்போது நமக்கு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. மேலும், நாம் வாங்கும் யூனிட்களின் என்ஏவி பிஇ - எஸ்டிபி மூலம் வாங்கும்போது நார்மல் எஸ்டிபி-யைவிடக் குறைவாக இருக்கிறது. (அட்டவணை-1 பார்க்கவும்)


Sample calculation of PE STP
Table 1


Amount

Units
Month
nav
stp
pe stp
pe zone
stp
pe stp
1
10
1000
2000
y
100.00
200.00
2
9
1000
2000
y
111.11
222.22
3
8
1000
5000
g
125.00
625.00
4
11
1000
2000
y
90.91
181.82
5
12
1000
1000
r
83.33
83.33
6
8
1000
5000
g
125.00
625.00
7
7
1000
5000
g
142.86
714.29
8
8
1000
5000
g
125.00
625.00
9
9
1000
2000
y
111.11
222.22
10
10
1000
2000
y
100.00
200.00
11
11
1000
2000
y
90.91
181.82
12
10
1000
2000
y
100.00
200.00
Total

12000
35000

1305.23
4080.70
Avg unit price -cost of acquisition




9.19
8.58

PE STP could help lower the cost of acquisition compared to regular STP

Historical data of cost of acquisition of PE-STP vs Normal STP ( indexed to base 100)



ஒன்றை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இந்த PE STP என்பது ஒரு குறிப்பிட்ட திட்டம் இல்லை. இது SIP மற்றும் STP போன்ற முதலீட்டு முறையே. Dynamic Equity திட்டங்களில் PE பொறுத்து பங்கின் அளவு திட்டதில் மாறுபடும். இந்த PE STP இல் PE பொறுத்து நாம் முதலீடு செய்யும் பணத்தின் அளவு மாறும். Dynamic Equity ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் மட்டுமே முதலீடு. இந்த PE STP இல் எந்த பங்கு திட்டதிலும் முதலீடு செய்யலாம். ஒரு குறிபிட்ட பங்கு திட்டதில் இல்லாமல், எந்த பரந்து பங்கு திட்டத்திலும் ( Diversified Equity schemes)  சந்தை இறங்கி இருக்கும் போது அதிக அளவில் நம் முயற்சியின்றி ஆட்டோமேடிக்காக ( Automatic transfer) மூதலீடு செய்ய இது சிறந்த வழி.



Wednesday, 21 September 2016

விருப்பங்கள் பலவிதம் - தேர்ந்தெடுப்பது எவ்விதம் – Selection of scheme options in MF

Read/download this article in magazine/pdf format

கடந்த சில இதழ்களில், விகிதாசாரங்கள், உதாரணமாக லாப விகிதம் செலவு விகிதம் என்றெல்லாம் பார்த்தோம். நிதி மேலாண்மையில் விகிதாசாரங்கள் பார்ப்பது மிக மிக அவசியம் தான். சரி பார்த்து, புரிந்து.. திட்ட நிறுவனங்கள், திட்டங்கள் என்றெல்லாம் முடிவு செய்து ஆகிவிட்டது. வேலை முடிந்த்தா? அதுதான் இல்லை.. முதலீடு செய்ய படிவம் பூர்த்தி செய்யவேண்டுமே!! அங்கு தான் படித்த பட்டதாரிகளுக்கே திரும்பவும் +2 பரிட்சை எழுத்துவதுபோல் இருக்கிறது. இதற்கு choice கிடையாது. அவசியம் நிரப்ப வேண்டிய * ஸ்டார் குறியீட்டு இடங்கள் பல இருக்கின்றன. எனவே திட்டங்கள் வாங்கும்போது காகிதத்திலோ அல்லது ஆன்லைனிலோ (online)  சரியாக புரிந்து நடப்பது அவசியம். கோட்டை விட்டால் படிவம் Fail ஆகி, சுவற்றில் அடித்த பந்து திரும்பி வருவது போல் நமக்கே திரும்பி வந்துவிடும்!! இதனால் நாம் நினைத்த நேரத்தில் சந்தையின் சரியான நேரத்தில் பங்குகளையோ திட்டங்களையோ வாங்காமலோ விர்க்காமலோ போய் விடலாம். சரி பரிட்சையில் "பாஸ்" செய்வது எப்படி , பொறுங்கள், கூறுகின்றேன்...

முதலில், நமக்கு மிகவும் பிடித்த நன்றாக தெரிந்த விடைகளில் கூட சிலருக்கு சிக்கல் வருகிறது. என்னவென்று தெரிந்ததா..?? நம் பெயர் தான்!! படிவத்தில் பெயர் எழுதும் போது அவசியம் பான் (PAN) கார்டில் எந்த பெயர் உள்ளதோ அதே வகையில் அதே ஸ்பெல்லிங்கில் எழுதவேண்டும். ஸ்பெல்லிங்கை மாற்றினால் படிவம் Pass ஆகாது.

அடுத்து என்ன? விலாசம் தான்.. ஒவ்வருவருக்கும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட விலாசங்கள் உள்ளன. எந்த திட்டத்திற்கு எந்த விலாசத்தை கொடுத்தோம் என்பது ஞாபகம் இருப்பதில்லை. எனவே தற்போதிருக்கும் விலாசத்தை படிவத்தில் நிரப்புவதே சரியான வழி. அந்த விலாசத்திற்கு அடையாள அட்டை இருக்க வேண்டும். அச்சிகள் ஆத்தா வீட்டு விலாசத்தில் அடையாள அட்டை வைத்துக்கு கொண்டு, செட்டியார் வீட்டு விலாசத்தில் திட்டங்கள் வாங்க முயற்சி செய்வது சரியாக வராது. திருமணமானவுடன் புதிய அடையாள அட்டை புது விலாசத்தில் வாங்குவது சிறப்பாக இருக்கும்.

அடுத்து, யார் பெயரில் திட்டங்கள் வாங்குவது?? ஆச்சி பெயரிலா (மதுரை), செட்டியார் பெயரிலா (சிதம்பரம்) இல்லை புத்தம் புதிதாக பிள்ளை பெயரிலா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள். நான் எதுவும் சொல்வதற்கில்லை!! ஆனால் அதன் சாதக பாதகங்களை சற்று விளக்குகிறேன். உதாரணமாக, வரி விலக்கு வேண்டி வரி  விலக்கு திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் யாருக்கு வரி விலக்கு வேண்டுமோ அவர்கள் பெயர் முதலில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொத்தம் பொதுவாக குழந்தைகள் பெயரில் திட்டங்கள் வாங்கினாலோ தாய் தந்தை அல்லது காப்பாற்றுபவர் பெயர் கட்டாயம் கொடுக்க வேண்டும். (Parent or Guardian) மேலும் தனியாக ஒருவர் மட்டும் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பதிலாக இருவராக சேர்ந்து வாங்குவது சாலச் சிறந்தது. அதிக பட்சமாக மூன்று பேர் பேரிலும் திட்டங்கள் வாங்கலாம். இருவர் அல்லது மூவராக வாங்கும் பொழுது யார் வேண்டுமானாலும் அந்த திட்டத்தை நிர்வகிக்க ஏற்றவாறு ( any one or survivor ) படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும். ஒருவர் இன்னொருவரை ஏய்த்து விட்டு முதலீட்டை ஏப்பம் விட்டுவிடுவதாக கடுகளவு சந்தேகம் வந்தாலும் ( Joint)  என்று பூர்த்தி செய்து பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ளவும். முன்னர் கூறியபடி முதல் முதலீட்டாளரே வரி சட்டங்களின் படி அந்த திட்ட முதலீடுகளுக்கு பொறுப்பாவார்கள்.

ஒருவழியாக யார் பெயரில் வாங்குவது என்று கலந்தோலாசித்து, இல்லை வழக்கம் போல் உயர்ந்த கை முடிவாகிவிட்டதா, அடுத்தாக வங்கி கணக்கு!! நமது திட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகளை பதிந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் ஒரு வங்கி கணக்கு அவசியம். திட்டத்தின் முதல் பெயர்தாரர் வங்கி கணக்கிலும் அவர் பெயர் இருக்க வேண்டும். வங்கி கணக்கை சரியாக கொடுப்பதனால் தற்காலத்தில் நாம் திட்டங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் காசோலைகள் மற்றும்  online transfer உபயோக படுத்துவதை தவிர்க்கலாம். வாங்கும்போது வங்கி கணக்கிலுருந்து நேரடியாக பணத்தை கழித்துக்கொண்டு திட்டத்தை வாங்குவார்கள். விற்கும் போது அல்லது டிவிடெண்ட் வரும்போது நேரடியாக வங்கி கணக்கில் வரவைத்து விடுவார்கள். இது ஒரு எளிய வழி. இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள இன்னும் சில இதழ்கள் காத்திருக்கத்தான்வேண்டும்!

இங்கு முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம்.. திட்டத்தில் யார் பெயர் இருக்கிறதோ அவர்கள் தான் திட்டத்தில் வாங்கவும் விற்கவும் முடியும். உதாரணமாக, உங்கள் பெயரில் இருக்கும் திட்டத்திற்கு உங்கள் தம்பி வங்கி கணக்கிலிருந்து காசோலையில் கையெழுத்திட்டு பணம் கொடுத்து திட்டத்தை வாங்க முடியாது. அவசியம் வாங்க வேண்டும் என்று வரும் பொழுது அதெற்கென்று தனியாக படிவம் பூர்த்தி செய்து அவரது பான் (PAN) கார்ட் விவரங்கள் தர வேண்டும். அதுபோலவே விற்கும்போது விற்று வரும் பணம் உங்கள் கணக்கில் மட்டுமே வர வைக்கப்படும். வேறு கணக்கில் வர வைக்க மாட்டார்கள். நல்லது தானே!! பணம் பத்திரமாக இருக்கும்.. "புரிந்தது புரிந்தது, எங்களுக்கென்ன எட்டு கணக்கா உள்ளது? ஒன்றே ஒன்று கண்ணே கண்ணேவென்று ஒரு கணக்கு தானே இருக்கிறது".. என்று சொல்பவர்கள் மேலே படிக்கவும்!!

Growth’ஆ அல்லது dividend’ஆ..  Payout’ஆ அல்லது reinvestment’ஆ..?  எதை தேரந்தெடுப்பது என்றெல்லாம் சந்தேகம் வருவது சகஜம் தான். அதன் விவரம் இதோ..

Growth: நீங்கள் முதலீடு செய்யும் பணத்தில் வரும் லாபத்தை அவர்களே நிறுவனமே  வைத்துக் கொள்வார்கள். அதை திரும்பவும் முதலீடு செய்து நமது பணத்தை பெருக்குவார்கள். நாம் திட்டத்தை முடிக்கும்போது அன்றைய தேதியில் இருக்கும் மதிப்பை நமக்கே திருப்பி தந்துவிடுவார்கள். முதலீடு செய்த தேதி மற்றும் திரும்ப பெரும் தேதி, இதற்கு இடைப்பட்ட காலங்களில் dividend வட்டி என்று எதுவும் தர மாட்டார்கள்.

Dividend: திட்டம் லாபம் சம்பாதிக்கும் போது திட்டமேலாளரின் முடிவின் படி வரும் லாபத்தை நமக்கு பகிர்ந்தளிப்பார்கள். இது வருடத்திற்கு ஒரு முறையோ இல்லை பல முறையோ இல்லை பல வருடங்களுக்கு ஒரு முறையோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இதற்குள் இரண்டு வகை உள்ளது. ஒன்றின் பெயர் Dividend Payout - இதில் வரும் லாபம் நமது வங்கி கணக்கில் வரவு வைக்கைப்படும். Dividend Reinvestment - வரும் லாபம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படமாட்டாது, அதே திட்டத்தில் திரும்ப முதலீடு செய்யப்படும். என்ன குழப்புகிறீர்கள், இது தானே growth என்பது..? என்று கேட்டவர்கள் , நீங்களே உங்கள் முதுகில் தட்டிக்கொள்ளுங்கள்.. புத்திசாலிகள் தான்!! இரண்டிற்கும் உள்ள சிறிய வேறுபாடு, இந்திய வரி துறை இரண்டையும் எப்படி பார்க்கிறது என்பது தான். Growth மூலம் வரும் லாபத்திற்கு capital gain எனப்படும். Dividend ஆக வரும் லாபம் தற்போதைய சட்டங்களின் படி வரி விளக்கு பெற்றது. மேலும் விவரம் வேண்டுமெனில், எழுதுங்கள் எனக்கு இன்னொரு இதழில் பார்ப்போம்...

வாழ்க்கையில் அன்றாட தேவைகளுக்கு பணம் வேண்டும் என்ற சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு dividend payout  என்ற வகையை பங்கு திட்டங்களில் தேர்வு செய்யலாம். மற்றவர்கள் growth முறையை தேர்வு செய்யலாம். கடன் திட்டங்களில் வரும்போது இது சற்று மாறுபடும். தற்போதைய இந்திய வரி சட்டத்தின் படி, திட்ட நிறுவங்கள் வரும் லாபத்தில் dividend distribution tax கட்டிய பிறகு மீதம் இருப்பதை நமக்கு பகிர்ந்திடுவார்கள். இதனால் வரும் லாபம் சற்று குறையலாம். இந்த நிலைமையில் growth முறையா இல்லை dividend payout முறையா என்பது அவரவர்கள் வரிக்கட்டும் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். இதை புரிந்து கொண்டு நமக்கு எது சாதகமோ அதை தேர்வு செய்யவேண்டும்.

FATCA - மத்திய அரசின் புதிய கொள்கையின் படி சமீப காலமாக இந்த படிவமும் பூர்த்தி செய்யவேண்டும். இதன் படி நாம் இந்தியாவில் மட்டும் கணக்கு வைத்திருக்கிறோமா இல்லை அயல் நாடுகளில் கணக்கு இருந்தால் அந்த கணக்கையும் வரி கட்டும் விவரம் ஆகிவற்றையும் தெரிவிக்க வேண்டும்.

DMAT / Physical Mode - நமது பரஸ்பர நிதி திட்டங்களை இந்த இரண்டு வகையிலும் வைத்துக்கொள்ளலாம். Phyiscal mode என்றால் கற்காலம் ( Stone age) என்று என்ன வேண்டாம். Phyiscal mode திட்டத்தின் விவரங்களையும் கணினியில் இணையத்தில் பார்க்கலாம்.

இணையம் மூலம் வாங்குவது, விற்பது, கைப்பேசியை இதற்கு உபயோகப்படுத்துவது, போன்றவற்றை வரும் காலங்களில் பார்ப்போம்!

Tuesday, 13 September 2016

விரல் நுனியில் தகவல்கள் - Technology: One touch away


This article has been recently published in "Nanayam Vikatan" dated 18/09/2016. Here's the link to read my article online, if you have online access in vikatan group. The same article is given below.

http://www.vikatan.com/nanayamvikatan/2016-sep-18/mutual-fund/123296-mutual-fund-tips.art

சமீபகாலமாக கையில் கருப்பு கலரில் ஒரு சென்சார் கட்டிக்கொன்டு திரிகின்றேன். அது எவ்ளோ தூரம் நடந்தேன் எவ்ளோ நேரம் தூங்கினேன் என்று என்னவெல்லாமோ, கையில் திரட்டிய தகவல்களை கைபேசியில் தருகிறது. காரணம்??? என்ன, தெரிந்ததுதானே!!! தகவல் தொழில்நுட்பம் தான்.. தற்போது யுவன்களும் யுவதிகளும் பயன்படுத்தும் செயலிகள் (Mobile Apps) நிறைய பேருக்கு சற்றும் பரிச்சியம் இல்லாதவை. ஆனால் பலன்களோ அதிகம் தான்!! இந்த தகவல் தொழில்நுட்பத்தை முதலீட்டு  தகவல்களை திரட்ட எப்படி பயன் படுத்தலாம் என்று பார்ப்போமா...

அன்றாடம் ஆயிரம் செயலிகள் (apps) வந்த வண்ணம் உள்ளன. விரல் நுனியில் வங்கி, பணம் என்றெல்லாம் வந்துவிட்டது. பரஸ்பர நிதி மட்டும் என்ன விதிவிலக்கா? அதுவும் உங்கள் ஆள்காட்டி விரலின் அடியில் தான் இருக்கிறது. தொடுங்கள், பெறுங்கள் யூனிட்டுகளை (unit). பரஸ்பர நிதி திட்டங்கள் பலருக்கு போய் சேரவில்லை என்று அரசாங்கத்திற்கு ஆதங்கம். திட்டங்கள் வைத்திருப்போரும் விடாமல் தினந்தோறும் படிவங்கள் பூர்த்தி செய்தவாறு உள்ளனர். இது மாற, எளிமையான புது உலகத்திற்குள் நுழைவோம்!! நேற்றுவரை KYC என்பது பெரியதொரு வேலை. இன்று அது maggi போல தான். புரிந்ததா?? online மூலம் இரண்டு நிமிடங்களில் adhaar அட்டையும், pan அட்டையும் இருந்தால் KYC தயார்!! தற்பொழுது kyc க்கு புதியதொரு நடைமுறை நடைமுறை வந்துள்ளது. இதனால் நாம் வங்கி கணக்கு, பரஸ்பர நிதி கணக்கு, அஞ்சல் அலுவுலக கணக்கு, காப்பீட்டு கணக்கு என்று ஒவ்வொன்றுக்கும் தனி தனியாக kyc செய்ய வேண்டாம். ஓர் இடத்தில kyc இருந்தால் போதுமானது. அது உங்கள் ஊருக்கு வர நாள் ஆகலாம், விசாரிப்பது உசிதமானது.

இரண்டாவதாக, வாங்குவதற்கோ, விற்பதற்க்கோ அதற்கான படிவங்கள் இல்லாதவர்கள் online மூலம் அணைத்து பரஸ்பர நிதி பரிமாற்றங்களை பண்ண முடியும். இதை கைபேசி செயலி மூலம் அல்லது கணினி , tablet மூலம் (மாத்திரை என நினைத்துக்கொள்ள வேணாம்..) அந்தந்த நிறுவனத்தின் வளையதளங்களுக்கு சென்று செய்ய முடியும். இந்த online வசதி பெறுவதற்கு பல படிவங்கள் பூர்த்தி செய்து, முத்திரை தாளில் கைநாட்டு போட்ட காலங்கள் மலையேறிவிட்டது. நாலே (4) கேள்வி தான்… பதில் சரியாக சொன்னால் அடுத்த நிமிடம், online access!! என்ன, நாலு கேள்வியை தெரிந்து கொள்ள ஆசைதானே..?? அந்த கேள்வியை நான் leak செய்து விடுகிறேன்!!
1) மின்னஞ்சல்
2) கைபேசி எண்
3) வங்கி கணக்கு எண்
4) பாண் அட்டை எண்

நீங்கள் ஒவ்வொரு நிதி நிறுவனங்களிலும் வெவ்வேறு மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தால் ஞாபகாமா online access வாங்க அதே மின்னஞ்சல் முகவரி கொடுக்க வேண்டும். ஞாபக மறதி இருந்தால் சிக்கல் தான்!! பொதுவாக நான் கூறிய நாலு கேள்விகள் தான். ஆனாலும் அது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடலாம்.

ICICI Prudential பரஸ்பர நிதி நிறுவனத்தின் online access பெறுவதற்கு நீங்கள் செல்லவேண்டிய தளம் - https://www.icicipruamc.com/ அதனுடைய தகவல் பக்கத்தின் மாதிரி இங்கு தரப்பட்டுள்ளது.


செயலி என்று வரும்போது android மற்றும் iphone ஆகிய கைபேசிகளுக்கு நிறைய நிதி நிறுவன செயலிகள் உள்ளன. ஆனால் windows கைபேசியில் பார்க்க அவ்வளவு செயலிகள் இல்லை. அதற்காக அவர்கள் கவலை கொள்ள தேவை இல்லை. அதே சேவைகளை கணினி மூலம் பெறலாம். online மூலம் என்ன தான் பெற முடியும் என்று பார்த்துவிடுவோம்...
1) உங்களது கணக்கின் சமீபத்திய மதிப்பு , யூனிட்களின் கூட்டு தொகை ஆகிய summary விவரங்களை பார்க்கலாம். ICICI Prudential மாதிரி summary sheet தரப்பட்டுள்ளது.


Folio
Fund Name
Balance Units
NAV
Cost Value
Dividend Reinvested Value
Current Value
GainLoss (in Rs)
Return (XIRR)
XXX
Infrastructure Fund
2,222
15.8
27,180
0
35,112
7,932
27.70%
XXX
Dynamic
2,319
22.2
30,018
10300
51,564
21,546
13.13%
XXX
India Recovery Fund Series 1
9,990
10.0
99,900
0
99,800
-100
-0.24%
XXX
FMP Series 64
990
12.7
9,900
0
12,590
2,690
8.39%
XXX
Interval Fund Series VI
1,500
12.4
15,000
0
18,557
3,557
9.11%

2) மேலும் சில தளங்கள் மட்டும், உங்களுக்கு கிடைக்கும் வருடாந்தர லாப சதவீதம் (XIRR) திட்டவாரியாக கிடைத்தது என்ற தகவலை தரும். மாதிரியில்  காண்பித்திருக்கும் summary sheet இல் XIRR காணலாம். ஆனால் எல்லா நிறுவன தளங்களும் இவற்றை காண்பிப்பது இல்லை. எல்லா தளங்களும் தர வேண்டும் என்று சட்டங்கள் வந்தால் நல்லது!

3) விரிவாக பார்க்கவேணுமெனில் உங்கள் எல்லா பரிமாற்றங்களும் (நிதி பரிமாற்றம், நிதி இல்லா பரிமாற்றம்) போன்ற விவரங்களை பெரும்பாலும் pdf file ஆக தரவிறக்கம் (download) செய்யலாம். நாம் மேற்கொண்டு கூட்டி கழித்து பார்ப்பதற்கு pdf file ஆக இல்லாமல் excel ஆக இருப்பது உத்தமம். ஆனால் எல்லா தளங்களும் இவ்வாறு excel ஆக கொடுப்பது இல்லை. கொடுத்தால் உபயோக படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என்பது என் அவா.

4) மேற்கொண்டு online மூலமாக நீங்கள் வாங்க விற்க, ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மாற முடியும் (switch)

5) முன்னர் கூறியபடி நிதி அல்லாத பரிமாற்ற சேவைகள் சிலவற்றை online மூலம் செய்யலாம். ஆனால் மிக முக்கியமாக வங்கி கணக்கு எண் மாற்றுவது போன்றவற்றை online மூலம் செய்ய முடியாது. காரணம்?? நமது நன்மைக்காக தான்... அதற்கு முதலீட்டாளர்கள் கையெழுத்திட்ட படிவங்கள் தேவை.

6) சமீபத்தில் அனைவரும் கடந்த வருட வரி கணக்குகளை அரசாங்கத்திடம் சமர்த்திருப்பீர்கள் (IT Return) , இந்த வரி கணக்கு சமர்ப்பிப்பதற்கு முக்கிய தேவை, பங்கு அல்லது பரஸ்பர நிதிகளில் எவ்வளவு லாப நஷ்ட விவரம் வேண்டும். இவற்றை மிக எளிதாக online மூலம் பெற்றுவிட முடியும். மேலும் உங்களுக்கு எவ்வளவு டிவிடெண்ட் கிடைத்தது என்பதையும் இந்த தளங்களில் பெற்றுக்கொள்ளலாம். வரி கணக்கு சமர்ப்பிப்பவர்களுக்கு இது மிக உபயோகமாக இருக்கும். இந்த capital gain , dividend distribution விவரங்களை பதிவிறக்கம் செய்து உங்கள் கணக்காளர்களிடம் (auditor ) கொடுத்து விடலாம். இல்லை நீங்களே online மூலம் வரி கணக்குகளை சமர்ப்பிக்கும் முறைகளும் உள்ளன. அதை பற்றி தெரிந்து புரிந்து கொண்டு கணக்காளர்கள் இல்லாமல் நாமே நேராக return file செய்து விடலாம்.

தற்சமய நிலவரபடி இந்த செயலிகள், இணையதள உபயோகங்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை. இதற்கு ஆகும் செலவை திட்ட செலவினங்களோடு சேர்த்துவிடுவார்கள். எனவே ஏன் இன்னும் தயக்கம்?? நல்ல பயன்களை அனுபவித்து கொள்வோம். இதனால் நிதி நிறுவனங்களுக்கு நேரே செல்லும் பெட்ரோல் செலவு சிக்கனம் ஆகலாம். நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது தானே!! இதே போல் நாம், நமக்கு வரும் தகவலை ஈமெயில் மூலமாக பெறுவதால் காகிதங்களில் அச்சிடப்படுவது குறைகிறது. இது சுற்று சூழலுக்கு மிகவும் நல்லது. எனவே பங்கு, பரஸ்பர நிதி உபயோகிப்பவர்கள் வருடாந்திர கணக்கு புத்தகங்களை (Annual Report ) ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்வது சாலச் சிறந்தது.