Friday 6 May 2016

பரந்து விரிந்த முதலீடு (Asset Allocation)

கடந்த பல வருடங்களில் தங்கம் ஏறு முகமாக இருந்த்தால், ஆச்சிகள் பல ரூபத்தில் எல்லா வருடங்களில் தங்கம் வாங்கி சேர்த்து இருந்த்தால், இப்போது என்ன ஆகி இருக்கும்.  லாபம், இல்லாமல், அசலும். மிக குறைந்து இருக்கும். அப்படியெனில், தனி நபர் நிதி பராமரிப்பில் நமது முதலீடுகள் எப்படி இருக்க வேண்டும்?   ஒரு பழமொழியை உங்களுக்கு நினைவு படுத்துகின்றேன்.  நமக்கு தெரிந்ததுதான்.. “எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே!!” காரணம் என்ன? தட்டு தடுமாறி விழுந்தால், எல்லாமும் உடைந்து விடும். சாப்பாட்டிற்க்கு எதுவும் இருக்காது..நம் முதலீட்டை சரியான முறையில் எவ்வாறு ஒதுக்கீடு செய்வது என்பதை தெரிந்து கொள்ள மேலே படியுங்கள்...



இந்த வருடமோ அல்லது  போன  வருடமோ, காரைக்குடிக்கு அருகில், திருச்சி இராமேஷ்வரம் நான்கு வழி சாலையில், ஒரு நல்ல இடம் வாங்கி, அது சற்று ஏறுமுகமாக இருந்தால், உடனே அடுத்ததாக சென்னைக்கு அருகில் செங்கல்பட்டு தாண்டி, ஒரு நல்ல இடம் விலைக்கு வந்தால் அதை வாங்கிவிடலாம் என்று தானே தோன்றும்.. அது இயல்பு.. ஆனால்அதை நாம் வாங்க முனையக் கூடாது. ஏனெனில் இரண்டும் வெவ்வேறு இடமாகவும், வெவ்வேறு ஊராகவும் இருந்தாலும், அடிப்படையில் இரண்டும் ஒரே வகையான முதலீடு!!  செட்டியார்கள் இடமாக சேர்கிறார்கள், அடுத்து ஆச்சிமார்கள் தங்கமாக சேர்க்க விரும்புகிறார்கள்.  அவர்களுக்காக எழுதிய “தணியுமா தங்க தாகம்”, தீபாவளி இதழில் வெளிவந்ததை படித்து இருப்பார்கள். அதை படித்துவிட்டு நீங்கள் கூற நினைப்பது கேட்கிறது.... தங்கத்தை காசாக வைத்து இருக்கின்றோம், நீங்கள் எழுதிய படி, அரசாங்க தங்ககடன் பத்திரமாக வைத்து இருக்கின்றோம், தங்கம் நகையாகவும் உள்ளது. ஆனால் நாம் அறியாதது யாதெனில் வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு ரூபங்களில் முதலீடு இருப்பது போல் தோன்றினாலும், அடிப்படையில் எல்லாம் தங்க முதலிடே!!

சராசரி முதலீட்டார்களின் எதிர்பார்பு என்ன? நமது முதலிடு, பல்கி பெருக வேண்டும். கொடுக்கும் கடவுள், கூரையை பிய்த்துக்கொண்டு கொடுத்தால் அதிக சந்தோஷம். இது எல்லோருக்கும், எல்லா சமயத்திலும் சாத்தியமில்லை... நம் அனைவரின் மனதிலும் ஓடும் ஒரு பொதுவான புலம்பல் “அது சரி, அடுத்த வீட்டு அண்ணாமலையின்  அணைத்து முதலீடும் ஏற்றம்தான், எப்போது நமக்கு ஏறி இருக்கு, சொல்ல!! எப்போதும், அடுத்தவனுக்கு தானே  ஏறுகிறது!!” இதற்கென்ன சொல்கீற்ர்கள்? என்வரையில், இது  ஊன்றி கவனிக்க வேண்டிய சமாசாரம். இந்த முதலீட்டு முறையில், நாம் சிறிது மாற்றம் செய்யலாம்.... செய்யவேண்டும், என்பதே என் விருப்பம்.

பொருளாதார  நிபுணர்கள் அடிக்கடி கூறுவார்கள், நமது எல்லா முதலீடும் ஏற்றத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. சிலது, சிறிது இறக்கத்தில் இருந்தாலும், பாதகமில்லை... மொத்த முதலீட்டில் ஏற்றம் இருந்தால், நன்மையே!! (காரணம், உலக வர்தக பரிமாற்றத்தில், உலகலாவிய பணத்தின் சுழற்சியில் (கொடுக்கல், வாங்கல் ) எல்லா பொருட்களும், தங்கம், கச்சா எண்ணை, (crude oil), நாடுகளின் பணத்தின் மதிப்பு, மற்றும், சேவைகளுக்கான வருமானம் ( Services) , ஆகிய அணைத்தும், ஒரே போல் ஏறுவதில்லை, அதே போல் இறங்குவதில்லை). ஆனால்  நிச்சியமான  ஒன்று,  நமக்கு  கிடைக்கும்  முதலீட்டு  வருமானம், இந்த  ஏற்ற  இறக்கங்களை  வைத்துதான்  அமைகிறது.

இதில் தங்க விலை ஏற்ற இறக்கம், நமக்கு தெரிந்தது, எளிதாக புரியக்கூடியது. இந்த ஏற்ற இறக்கங்கள், ஒன்றோடு  ஒன்று  பின்னி  பிணைந்தது. எளிதாக புரிவதற்க்கு, சில தொடர்புகளை  பற்றி  கூறுகின்றேன். உலகில், அமைதி தடைபடும் போது, போர் காலங்களில், தங்க விலை ஏறுவதற்கான வாய்புகள் அதிகம். மத்திய வங்கி, வட்டி  விகிதம்  குறைக்கும் போது, கடன்  பத்திர விலை ஏறும், இதன் விளைவாக கடன் பத்திர  முதலீட்டு வருமானம் பெருகலாம். நாட்டின் GDP யை பொறுத்து, பங்குச் சந்தை மாறுபடும்.

இதற்க்கும்  செங்கல்பட்டில்  இடம்  வாங்குவதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பவர்களுக்கு, பதில் இதோ … இடத்தின் விலைகளும், பண  சுழற்சியை வைத்தே அமைகின்றது, Easy liquidity என்று கூறுவார்கள் (குறைந்த வட்டி விகிதத்தில், நிறைய  பணம்).

சரி  ஏதோ  புரிந்தது என்கிறீர்களா. விக்ஷயத்திற்கு  வருவோம். நாம் எப்படியெல்லாம் முதலீடு  செய்யலாம்  என்பதற்கு  பல வகைகள் உள்ளன:

1. அணைவருக்கும் தெரிந்த தங்கம், வெள்ளி, வைரம், வைடுரியம்....
2. அலைந்து திரிந்து, தேடி பிடிக்கும் இடம், வீடு, அசையா சொத்துக்கள்
3. வங்கி வைப்புகள், கடன் பத்திரங்கள், நிறுவன கடன் முதலீடு
4. சிறு சேமிப்பு, அஞ்சலக திட்டங்கள், அரசாங்க திட்டங்கள்
5. பங்கு சந்தை
6. பரவலாக தெரியாத ஒவியம், மற்றும் புராதனமான பொருட்கள்

மேற்கூறிய  ஆறு வகைகளில் பரஸ்பர நிதிகளை கூறாததற்கு காரணம், இந்த ஆறு வகை முதலீடும் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட வகையை சார்ந்த முதலீடு. பரஸ்பர நிதிகள் மூலம், 1,3,5 வகைகளை உள்ளிட்டு மூன்று வகைகளில், வீட்டில் இருந்தபடியே முதலீடு செய்யலாம். இதன் மூலம், பரஸ்பர நிதியில் மூதலீடு செய்து, பரந்து விரிந்து முதலிட்டின் பயன் பெறலாம்.

பரஸ்பர நிதி  முதலீட்டில், ஒரு  பகுதி  பங்கு சந்தை திட்டத்திலும்,  இன்னொரு பகுதி அரசாங்க கடன் பத்திர பரஸ்பர நிதி திட்டத்திலும், எஞ்சிய  பகுதி  பரஸ்பர நிதி தங்க திட்டத்திலும் முதலிடு  செய்வதன்  மூலம், ஒரே மாதிரியான முதலீடு  என்று தோன்றினாலும், அடிப்படையில் இது பங்குச் சந்தை, கடன் பத்திரம், தங்கம் என்ற வெவ்வேறான முதலீடே!! நான் சற்று மேலே கூறியே ஒரே மாதிரியான தங்க முதலீடு உதாரணத்திற்கும்  இப்போது கூறிய பரஸ்பர நிதி பற்றிய உதாரணத்திற்கும் ஆன வேறுபாட்டை புரிதல் அவசியம்!!

இதெல்லாம் சரி, ஒவ்வொரு வகையிலும், என்ன சதவீதம் முதலீடு  செய்ய வேண்டும் என்பதற்கு முன்.... நமது நிதி நிலைமை, குடும்பத்தினரின் எதிர்பார்புகள், முதலீட்டின் ஏற்ற இறக்கங்களை சந்திக்கும் வலிமை ( Risk tolerance),  முதலீட்டின் காலம், முதலீட்டின் காரணம், மகள் கல்யாணம், பிள்ளைகள் மேற்படிப்பு, நமது  ஒய்வு  ஊதியம் ஆகிய  பல்வேறு கோணங்களை  ஒட்டியே  என்ன  சதவீதம், எங்கு முதலீடு  செய்ய வேண்டும்  என்று   நாம் தீர்மானிக்க வேண்டும்.

பரந்து விரிந்த முதலீட்டின் வகைகளை படத்தில் காணலாம். இது ஒரு வகை மட்டுமே. முதலீட்டாரின் வயது, முன் கூறிய முதலீட்டின் காரணங்கள் பொறுத்து  இந்த சதவீதம் மாறுபடும்.

Real estate
இடம், வீடு மற்றும் அசையா சொத்துக்கள்
50%
Equities
நேரடியான அல்லது பரஸ்பர நிதி மூலம் பங்கு முதலீடு
30%
Debt
கடன் பத்திரங்கள் - நேரடியான அல்லது பரஸ்பர நிதி மூலம
10%
Gold
தங்கம்
5%
Cash
கையில் பணம் - அவசர தேவைகளுக்காக
5%


இந்த பரந்து விரிந்த வெவ்வேறான முதலீடுகளை  பராமரிப்பதில், கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் :
1. சொத்துக்களின் இன்றைய  மதிப்பை பார்க்க வேண்டும்
2. தங்கம் என்றால் நம்மிடம் லாக்கரில் மற்றும் வீட்டில் உள்ள நகை, அணிந்திருக்கும் நகை, தங்கக் காசு, தங்கப் பத்திரம் என்று எல்லாவற்றையும் கணக்கில் கொள்ளவேண்டும்
3. பங்குகளில், நேரடி மற்றும் பரஸ்பர நிதியில் வாங்கியது , எல்லாவற்றையும் சேர்த்து கொள்ளவேண்டும்
4.   சிலர் கட்டாயத்திற்கு வாங்கி விட்டு, பின் அதை மறந்துவிடுவார்கள், இது பலன் அளிக்காமல் போகலாலம்.

மீண்டும் படத்தை பாருங்கள்… ஆரம்பத்தில் நமது பங்குச் சதவீதம்  30% ஆக இருந்து, ஒரு வருடம் கழித்து 40% ஆகலாம். அப்போது, நாம் 10%  சதவீதம் பங்குகளை  விற்று, கடன் பத்திர முதலீடு குறைந்திருந்தால், அதில் முதலீடு செய்யவேண்டும். இதனால், ஏறிய பங்குகளில் லாபம் பார்க முடிந்த்து. அதே சமயம் பங்கு சதவீதம் திரும்பவும் 30%, கொண்டு வருவதன் மூலம், நமது Risk கட்டுக்குள்  இருக்கும். இதற்கு Asset Rebalance என்று பெயர். இது பெரும் பாலோனர் கவனிக்காதது.. ஆனால் மிகவும் அவசியாமானது! Asset Rebalance  செய்வது, கடினாமாக தோன்றினால், பரஸ்பர நிதியில் இதற்கென்று தனி திட்டங்கள் உள்ளது. ( Axis Triple Advantage fund)  குறிப்பிட்ட  இடைவெளியில், அவர்களாகவே பங்கு, மற்றும் கடன் பத்திர முதலீடுகளை மாற்றி அமைத்துக் கொள்வார்கள்.



முதலிலேயே பாரத்தோம். எல்லா முதலீடும், தங்கத்தில் மட்டுமே இருக்க கூடாது. அதற்கு பதிலாக, பங்கு, தங்கம், கடன்பத்திரம், ஆகிய மூன்றும் கலந்த முதலீடு எப்படி லாபம் தரும் என்பதை அட்டவனை படத்தில் பாரக்கவும்

என்ன முதலீட்டாளர்களே...  தனி  நபர்  நிதி  பராமரிப்பில் நமது முதலீடுகள் எப்படி இருக்க வேண்டும், அது  பரந்து  விரிந்து  இருப்பதன் நன்மைகள் பற்றி  புரிந்து  இருக்கும்.  முதலீட்டின் எல்லா பணத்தையும், ஒரே வகை முதலீட்டில் செய்வது நன்றன்று என்பது, தெளிவு.  

No comments:

Post a Comment