Saturday 7 May 2016

Documentation - நிதி பராமாரிப்பில் நிதியில்லா விபர பராமாரிப்பு

Read/download this article in magazine/pdf format

கடந்த சில இதழ்களில் வரி சேமிப்பு, தங்க முதலீடு , சிறுக சேமிப்பு, பரந்த முதலீடு பற்றி பார்தோம். இவற்றில் சிலர் முதலீடு செய்து இருக்கலாம். முதலீடு பெறுக வாழ்த்துக்கள். முதலீடு செய்ய முனைவபவர்கள் இருக்கலாம். முன்னர் முதலீடு செய்தவர்களூக்கு தெரியும், இதற்க்கு சற்று மெனங்கிட வேண்டும் என்று.

நிதி முதலீடுகள் காலையில் கடையில் சென்று பருப்பு வாங்குவது போல் எளிது இல்லைதான். பருப்பு விலை ராக்கெட்டில் போனாலும், ராக்கெட் விலை கொடுத்தால் பருப்பை கொடுத்துவிடுவார்கள். இன்றய நிலவரத்தில் பருப்பு வாங்க பான் நம்பர் கேட்பதில்லை. போற போக்கில் கேட்டாலும் ஆச்சியமில்லை. ஆனால் சர்வ நிச்சியமாக நிதி முதலீடு செய்ய பான் நம்பர் மற்றும் பல விபரங்கள் கேட்பார்கள்.

பான் நம்பர் விபரம் பரவலாக அனைவருக்கும் தெரிந்த்துதான். புதியவர்களுக்காக, பான் நம்பர் என்பது, Permanent Account Number, இது வருமானவரி அலுவலகம் மூலம் வழங்கபடுகின்றது. ஒருவர் ஒன்றுதான் வைத்திருக்கவேண்டும்.


சரி பான் நம்பர் வாங்கியாகிவிட்டது, உடனே நிதி நிறுவனங்களில், நிதி சார்ந்த முதலீடு செய்துவிடலாம், என்று நினைத்துவிடாதீர்கள். காரணம், கறுப்பு பணம், இரகசிய அந்நிய செலவாணி, தீவிரவாத பணப் பரிமாற்றம், இதையெல்லாம் தடுக்க மத்திய அரசாங்கம் பல விதி முறைகளை விதிக்கின்றது. இதில் மிக முக்கியமானது KYC - Know your customer ஆகும். இதை ஒவ்வொரு முதலீட்டாளரும் பின் பற்ற வேண்டும். இதை முதலீட்டுக்கு முன் செய்ய வேணடும். ஒரு முறை செய்தால் போதுமானது. இதற்கு பான் நம்பர், வண்ன புகை படம், சரியான விலாச அட்டை, திரும்பவும் கூறுகின்றேன். சரியான விலாச அட்டை, இங்குதான் நிறைய பேருக்கு சிரம்மே, ஆகியவை தேவை. இந்த KYC இல்லாமல் யாரும் நிதி முதலீடுகள் செய்ய முடியாது. பரஸ்பரநிதி, பங்கு வர்த்தகம், தங்க முதலீடான, அரசாங்க பத்திரம், சிறு சேமிப்பு, டீமாட் கணக்கு ஆக அணைத்திற்க்கும், ஆதியில் KYC வேண்டும்.

இதுவரை KYC செய்யவில்லை எனில், நிதி முதலீடு செய்ய KYC பதிவு பண்ணுங்கள். சில வருடங்களுக்கு முன் KYC இல்லாமல் முதலீடு செய்தவர்கள், கட்டாயம், இப்போது KYC செய்யவேணடும். சில காலம் முன்னதாக KYC செய்து முதலீடு செய்தவர்கள், KYC Status தற்போதைய வழி முறைகளுக்கு ஏற்றவாறு உள்ளதா என்று பார்த்துக்கொள்ளுதல் நன்று.

KYC Status அறிந்து கொள்ள கிழ் கண்ட இணையதள முகவரியை அனுகலாம். உங்கள் பான் நம்பர் உபோயிகித்து KYC Status அறியலாம். இது சரியாக இல்லை எனில் KYC பதிவை அதற்கான படிவம் பூர்த்திசெய்து சரி செய்யலாம். இதில் மெத்தனமாக இருக்காமல் சரி செய்வது, அடுத்த பரிமாற்றங்களை எளிதாக்கும், இல்லையெனில், அடுத்த பரிமாற்றங்கள் முடங்க வாய்புகள் அதிகம்.

சரி அத்தியாவசிய KYC செய்தாகிவிட்து, பான் நம்பர் உள்ளது, விலாசமும், சரியாக இருக்கின்றது, "சிவனே" என்று இருக்க கூடாது. அத்தியாவசியமாக இல்லாவிட்டாலும், அவசியமாக, சிலவற்றை செய்வது, சால சிறந்த்து. அவை பற்றி பார்போம்

முதலாவதாக கைபேசி எண், இப்போது, எல்லோரும் கைபேசி வைத்திருக்கிறாற்கள். இல்லாதவர்கள், கற்காலத்தை சேர்ந்தவர்கள் ஆகிவிட்டார்கள். இந்த கைபேசி எண்ணை நிதி நிறுவனங்களில் பதிவு செய்வது, நலம். இதன் நண்மை யாதெனில் வங்கிகளில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் பண பரிமாறுதல் நடந்தால் (உ-ம் Rs 5000) நமக்கு குறுந்செய்தி வருமாறு செய்யலாம். தற்பொழுது கைபேசி மூலம் பலவகை சேவைகள் பெற முடியும். வங்கி மற்றும் பரஸ்பரநிதி பரிமாற்றங்கள், தற்போதைய பரஸ்பரநிதி மதிப்பு ஆகியவற்றை கைபேசி மூலம் பெறலாம்.

அடுத்த்து, மின்னஞ்சல் முகவரி. இது கைபேசி அளவு பரவியாரவிடினும், அணைவருக்கும், தெரிந்த்தே. இதுவரை தனக்கென மின்னஞ்சல் முகவரி இல்லாவிடின், ஒன்றை அவசியம் பெற்று கொள்ளுங்கள். மின்னஞ்சல் முகவரியை உங்களது எல்லா நிதி நிறுவனங்களில் பதிவு செய்யுங்கள். எந்த ஊரில் இருத்தாலும், எந்த நாட்டில் இருத்தாலும், நாம் விரும்பிய நேரத்தில் நிதி நிறுவனத்திற்கு நேரில் போகாமல், குறிப்பாக அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைக்கு தொலை பேசியில் அழைக்கும் அவஸ்தை இல்லாமல், Mail back service மூலம் நமது கணக்கு பரிமாற்ற விபரம், இருப்பு, மதிப்பு, ஆகியன எளிதாக அறிய முடியும்.

இன்னொரு பதிவை பார்க்கும் முன், தற்போதைய சமூக அமைப்பு பற்றி சில வார்த்தைகள். எனக்கு தெரிந்தவரை, நிதி நிலைமை பற்றி கணவன் மணைவிக்கு, மணைவி, கணவனுக்கு, தந்தை மகனுக்கு, கூறுவதில்லை. இதுகாறும் ஒருவருக்கொருவர் நிதி நிலைமை பற்று பேசுவதில்லை. ஒவ்வொருவறுக்கும் ஓராயிரம் காரணங்கள், இருக்கலாம். இதன் விளைவு, முதலீடு செய்தவர்களுக்கு பிறகு, அந்த சொத்து, சரியான நபர்களுக்கு போய் சேருவதில், பல சிக்கல்கள் அல்லது போய் சேருவதில்லை. இதுதான் நிதர்சனம் . இந்த இடர்ப்பாடுகளை தவிர்க்க நாம் கண்க்கு துவங்கும் போதே, ஒருவருக்கு மேற்பட்டு, இருவராக கணக்கு துவங்கலாம். மேலும், கண்க்கு துவங்கும் போதே அவர்களுக்கு பிறகு அந்த சொத்து எத்தனை பேருக்கு எந்த விகித்தில் போக வேண்டும் என்று பதிய வேண்டும். இதற்கு பெயர்தான் Nomination. . பரஸ்பரநிதி, பங்கு வர்த்தகம், தங்க முதலீடான, அரசாங்க பத்திரம், சிறு சேமிப்பு, டீமாட் கணக்கு ஆக அணைத்திற்க்கும் Nomination செய்து விடுங்கள். இது நிறைய பேர் செய்யாத்து, ஆனால், அவசியமானது, உடன் Nomination செய்து விடுங்கள். இதில் சிலருக்கு சிக்கல் இருக்கலாம். நம்க்கு பிடித்து இன்று Nomination செய்தவர்கள், சில பல வருடங்களில் பிடிக்காதவரிகள் ஆகிவிடலாம், இது மனிதயிலபு. இந்த மாதிரி தருணங்களில், நாம் Nomination யை மாற்றி கொள்ளலாம். உங்களது காலம் வரை Nomination யை எத்தணை முறை வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.

Nomination போட்டாகிவிட்டது, இத்துடன் வேலை முடிந்த்தா, என்றால் அதுதான் இல்லை. ஏன் சற்று ஆழ்ந்து யோசியுங்கள், விபரம் புரியும், இனி அது பற்றி விரிவாக பார்போம்

நம்மூரில் சில சீமை சமர்த்தர்கள், இருப்பார்கள். நான் மேற்கூறிய எல்லாவற்றையும், பக்கவாக பதிந்து இருப்பார்கள். ஆனால் ஒன்று மட்டும் மறந்திருப்பார்கள், அல்லது வேண்டுமென்றே தவிர்த்துருப்பார்கள். இது எதிர்பாத்த பலன் தராது, சொத்து சரியான நபருகு போகாது. ஏன், யோசித்தீர்களா? தெரிந்த சண்டைகள்தான், மனைவிக்கு Nomination செய்தால், மகமிண்டி போர்கொடி காட்டுவாள், ஏன் மகனை போடவில்லை என்று, மகனுக்கு போட்டால் ஆத்தாகாரிகதி அதோகதிதான். இந்த சிக்கலில் செட்டியார் சொத்து விபரம், Nomination செய்த விபரத்தை மனைவிக்கும், மக்களுக்கும் சொல்வதில்லை. விளைவு, முன்னர் பார்த்துதான். சொத்து விபரம் வாரிசுகளுக்கு தெரியாது இருப்பதால், அது அவர்களுக்கு பெரும்பாலும் போவதில்லை. இப்பொழுது புரிகின்றாதா, Nomination செய்தால் மட்டும் போதாது, சொத்து விபரம், Nomination விபரம் வாரிசுகளுக்கு தெரிவது நல்லது. அல்லது அந்த நேரத்து சண்டைகளை தவிர்க, சொத்து விபரம், Nomination விபரம் வாரிசுகளுக்கு பின்னர் தெளிவாக தெரியும்படி செய்யலாம், இது எவ்வளவு சரியாக நடக்கும் என்பது, அவரவர் அறிவுப்படி.

இன்னமும் தெளிவாக சொல்வதானால், உதாரணத்திற்கு செட்டியார் மகனை Nomination செய்யும் போது, மகனை அழைத்து அருகில் வைத்துகொண்டு, இந்த பரஸ்பரநிதி நிறுவனத்தில் இந்த திட்டத்தில் இவ்வளவு பணம் இந்த கணக்கில் உள்ளது எனறு கூறினால், அவருக்கு பிறகு, அவன் அந்த பரஸ்பரநிதி நிறுவனத்தில் படிவங்கள், பூர்த்திசெய்து பணம் பெறுவது சுலபாமாக இருக்கும்.

இப்போது புரிகிறாதா, மூதலீடு செய்து, லாபம் பெறுவது, ஒரு நிலை, அந்த மூதலீட்டில் அணைத்து Documentation சரிவர செய்து, அதை பராமரித்து, உரிய நபர்களுக்கு சேருமாறு செய்வது இன்னெரு நிலை - இந்த இராண்டவது பகுதியை பெரும்பாலோர் செய்வதில்லை. அவரத்களுக்காகவே, இந்த கட்டுரை. இதை படித்தவர்கள், உங்கள் மூதலீட்டு நிறுவனங்களில் பான் நம்பர், KYC, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, சரியான விலாசம், Nomination ஆகியவற்றை சரி பாரத்து, விட்டு போனவற்றை உடனே பதியவும்.

யூடிஐ மாதிரி பரஸ்பரநிதி கணக்கு அச்சிடபட்ட படம் கிழே உள்ளது. இது சரிவர தகவல்கள் இல்லாத கணக்கு. இது போல் உங்கள் பரஸ்பரநிதி கணக்கு அச்சிடபட்டு இருந்தால், Please Provide என்று இருக்கும் இடத்தில் உள்ள தகவல்களை நீங்கள் பரஸ்பரநிதி நிறுவனத்திற்கு தருவது நல்லது. KYC Status Yes அல்லது ok என்று இருக்க வேண்டும்

மின்னஞ்சல் முகவரி, விலாசம் போன்றவை மாறக்கூடியது, மாறினால், அதை உடனுக்குடன் மாற்றி பதியவும். இப்பொழுது ஒரு "Tip" சொல்லுகின்றேன். நீங்கள், ஒன்றுக்கு மேற்ப்பட்ட பரஸ்பரநிதி நிறுவனத்தில் , மூதலீடு செய்து இருத்தால், ஒவ்வொரு நிதி நிறுவனத்திலும், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, சரியான விலாசம் ஆகியவற்றை மாற்ற வேண்டாம். அதற்கு பதிலாக, Change kyc form மூலமாக, ஒரு முறை மாற்றினால், எல்லா பரஸ்பரநிதி நிறுவனங்கள், அந்த விபரத்தை பெற்று கொள்ளும். எனவே இந்த Non-Financial Data எல்லாவற்றையும், சரியாக பதிந்து பயன் பெறலாம்.

No comments:

Post a Comment